புது டெல்லி, ஜூலை.18 - மத்திய அரசு ஊழியர்களின் வயதை 60-ல் இருந்து 62-ஆக உயர்த்தும் திட்டம் இல்லை என்று பணியாளர் துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் கூறினார்.
மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை அதிகரிப்பது தொடர்பாக அரசின்
பரிசீலனையில் திட்டம் ஏதும் உள்ளதா என்று பாராளுமன்ற்ததில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு மத்திய பணியாளர் பொது துறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியத்துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், மத்திய அரசிடம் அப்படி ஒரு திட்டமும் இல்லை என்று குறிப்பிட்டார்.
மற்றொரு கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், விடுமுறை சுற்றுலாச் சலுகையின் கீழ் போலியான ஆவணங்களை காட்டி செலவுத் தொகையை திரும்ப பெற மத்திய அரசு ஊழியர்கள் முயற்சித்தது கணடறியப்பட்டால் அவர்கள் மீது கடும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களுக்கு அவதாரம் விதிக்கப்படுவதுடன், அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு அந்தச் சலுகையைப் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்படும், என்று ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.