Skip to main content

மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு வயது உயர்த்தப்படாது

புது டெல்லி, ஜூலை.18 - மத்திய அரசு ஊழியர்களின் வயதை 60-ல் இருந்து 62-ஆக உயர்த்தும் திட்டம் இல்லை என்று பணியாளர் துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் கூறினார்.

மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை அதிகரிப்பது தொடர்பாக அரசின்
பரிசீலனையில் திட்டம் ஏதும் உள்ளதா என்று பாராளுமன்ற்ததில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு மத்திய பணியாளர் பொது துறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியத்துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், மத்திய அரசிடம் அப்படி ஒரு திட்டமும் இல்லை என்று குறிப்பிட்டார்.

மற்றொரு கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், விடுமுறை சுற்றுலாச் சலுகையின் கீழ் போலியான ஆவணங்களை காட்டி செலவுத் தொகையை திரும்ப பெற மத்திய அரசு ஊழியர்கள் முயற்சித்தது கணடறியப்பட்டால் அவர்கள் மீது கடும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களுக்கு அவதாரம் விதிக்கப்படுவதுடன், அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு அந்தச் சலுகையைப் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்படும், என்று ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு