Skip to main content

மாற்றுத்திறனாளிகள் பள்ளிகளில் விரைவில் சத்துணவு திட்டம்.

110 விதியின் கீழ் முதல்வர் ஜெயலலிதா நேற்று வெளியிட்ட அறிக்கை: றீ மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான மறுவாழ்வு இல்லம் திருவள்ளூர், கடலூர், திருவாரூர், தூத்துக்குடி, ராமநாதபுரம், கோயம்புத்தூர், ஈரோடு, திருச்சி, சேலம், வேலூர், மதுரை ஆகிய 11 மாவட்டங்களில் செயல்பட்டு வருகின்றன.
மீதமுள்ள 21 மாவட்டங்களில் மன நலம் பாதிக்கப்பட்டோருக்கான இல்லங்கள் அமைக்கப்படும். இதற்கென அரசுக்கு ஆண்டு ஒன்றுக்கு 1 கோடியே 92 லட்சத்து
10,800 ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும்.றீ தமிழ்நாட்டில் 14 வயதிற்கு மேற்பட்ட மன வளர்ச்சி குன்றியோருக்கான தங்கும்வசதி, உணவு மற்றும் தொழிற் பயிற்சியுடன் கூடிய 31 இல்லங்கள் 21 மாவட்டங்களில் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த இல்லங்கள் மேலும் தர்மபுரி, கரூர்,நாகப்பட்டினம், பெரம்பலூர், புதுக்கோட்டை, திருவாரூர் ஆகிய ஆறு மாவட்டங்களில் ஆண்களுக்கான ஆறு இல்லங்கள்.விருதுநகர், அரியலூர், திருப்பூர், நீலகிரி, விழுப்புரம் ஆகிய ஐந்து மாவட்டங்களில் பெண்களுக்கான ஐந்து இல்லங்கள் என 11 இல்லங்கள் திறக்க அரசு முடிவு எடுத்து உள்ளது.

இதனால், அரசுக்கு ஒரு இல்லத்திற்கு, ஆண்டுக்கு, 9 லட்சத்து 66 ஆயிரத்து 800 ரூபாய் என்ற வீதம் 11 இல்லங்களுக்கு 1 கோடியே 6 லட்சத்து 34 ஆயிரத்து 800 ரூபாய் செலவினம் ஏற்படும். றீ மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் இயங்கும் சிறப்பு பள்ளிகளில் மாணவர்களுக்கு தற்போது மதிய உணவு வழங்கப்படுவதில்லை. எனவே சத்துணவு திட்டம் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின், கட்டுப்பாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் சிறப்பு பள்ளிகளில் பயிலும் மாணவ,மாணவியர்களுக்கும் விரிவுபடுத்தப்படும். இத்திட்டத்தின் மூலம், உத்தேசமாக 1733 மாணவர்கள் பயன் பெறுவர். இதனால் அரசுக்கு ஆண்டொன்றுக்கு 38 லட்சத்து 99,250 ரூபாய் தொடர் செலவினம் ஏற்படும்.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா