Skip to main content

அரசு எம்.பி.பி.எஸ்.: அனைத்து இடங்களும் நிரம்பின

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ். இரண்டாம் கட்டக் கலந்தாய்வில் 19 அரசு மருத்துவக் கல்லூரிகளின் அனைத்து இடங்களிலும் மாணவர்கள் செவ்வாய்க்கிழமை சேர்க்கப்பட்டனர்.

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி அரங்கில் எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். இரண்டாம் கட்டக் கலந்தாய்வின் இரண்டாம் நாளான
செவ்வாய்க்கிழமை மறு ஒதுக்கீடு மூலம் அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கிடையே மாறுதல், திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரியின் 85 எம்.பி.பி.எஸ். இடங்கள் என அனைத்து அரசு மருத்துவக் கல்லூரியின் இடங்களும் நிரப்பப்பட்டன. சென்னை கே.கே. நகர் இஎஸ்ஐசி மருத்துவக் கல்லூரியின் 65 அரசு ஒதுக்கீட்டு இடங்களிலும் மாணவர்கள் சேர்க்கப்பட்டு அனுமதிக் கடிதம் வழங்கப்பட்டது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

150 சுயநிதி அரசு எம்.பி.பி.எஸ். இடங்கள்: மறு ஒதுக்கீடு காரணமாக முதல் கட்ட கலந்தாய்வில் இடம்பெற்ற சுயநிதி அரசு மருத்துவக் கல்லூரிகளில் 150 அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். காலியிடங்கள் ஏற்பட்டுள்ளன.

45 அரசு பி.டி.எஸ். இடங்கள்: எம்.பி.பி.எஸ். மறு ஒதுக்கீடு கலந்தாய்வு காரணமாக சென்னை பாரிமுனையில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரியின் பி.டி.எஸ். காலியிடங்களின் எண்ணிக்கை 45-ஆக அதிகரித்துள்ளது. கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி அரங்கில் புதன்கிழமை நடைபெறும் கலந்தாய்வில் மறு ஒதுக்கீடு, 45 அரசு பி.டி.எஸ். காலியிடங்கள், சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகள் சமர்ப்பித்துள்ள 1,020 அரசு ஒதுக்கீட்டு பி.டி.எஸ். இடங்கள் ஆகியவற்றை நிரப்பும் பணி தொடரும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். இரண்டாம் கட்டக் கலந்தாய்வு தொடர்ந்து வரும் 25-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு