சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்பில் மாணவர்களை சேர்க்க பொதுப்பிரிவு கலந்தாய்வு நடைபெற்று வருகின்றது.
கடந்த 15 நாட்களாக நடைபெறும் இந்த கலந்தாய்வில் மாணவர்கள் பல்வேறு
பாடப்பிரிவை தேர்வு செய்து வருகின்றனர். இதுவரை நடைபெற்ற கலந்தாய்வில் 11,503 பேர் மெக்கானிக்கல் பாடப்பிரிவை தேர்வு செய்துள்ளனர்.
இந்தாண்டு மெக்கானிக்கல் படிப்பில் அதிக ஆர்வம் காட்டி வருவதாகவும், அதற்கு அடுத்தப்படியாக, இசிஇ பாடப்பிரிவில் 11,029 பேர் தேர்வு செய்துள்ளதாகவும் பல்கலைக்கழக துணைவேந்தர் தெரிவித்துள்ளார்.