Skip to main content

அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் நியமனத்துக்கும் வயது வரம்பு நிர்ணயம்

அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் நியமனத்துக்கும் வயது வரம்பு நிர்ணயம் - பொறியியல் அல்லாத பிரிவுகளுக்கு சலுகை.

அரசு பொறியியல் கல்லூரி உதவிப் பேராசிரியர் நியமனத்தைத் தொடர்ந்து, அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் நியமனத்துக்கும் வயது வரம்பு 35 ஆக
நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், பொறியியல் அல்லாத பாடப்பிரிவுகளுக்கு வயது வரம்பில் எவ்வித கட்டுப்பாடும் கொண்டு வரப்படவில்லை.

அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர், பொறியியல் கல்லூரி உதவிப் பேராசிரியர் பணிக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் போட்டித் தேர்வு மூலம் நேரடியாக நியமிக்கப்படுகின்றனர்.கடந்த ஆண்டு வரை இந்தத் தேர்வுகளுக்கு வயது வரம்பு எதுவும் நிர்ணயிக்கவில்லை. உரிய கல்வித் தகுதியுடன் 57 வயது வரையிலும் விண்ணப்பிக்கலாம் என்றிருந்தது.தற்போது முதல்முறையாக அரசு பொறியியல் கல்லூரி உதவிப் பேராசிரியர் நியமனத்துக்குவயது வரம்பு கொண்டுவரப்பட்டுள்ளது. அதன்படி எஸ்சி, எஸ்டி வகுப்பினர் உள்பட அனைவருக்கும் வயது வரம்பு 35 ஆக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. இந்த வயது வரம்பு தகுதியுடன்தான் 139 உதவிப் பேராசிரியர்களை தேர்வு செய்வதற் கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த வாரம் வெளியிட் டது.

பட்டதாரிகள் அதிர்ச்சி

பள்ளி ஆசிரியர்கள், அரசு கலை, அறிவியல் கல்லூரி உதவிப் பேராசிரியர் நியமனத்துக்கு 57 வயது வரை விண்ணப்பிக்கலாம் என்ற விதிமுறை இருக்கும்போது, அரசு பொறியியல் கல்லூரி உதவிப் பேராசிரியர் நியமனத்துக்கு மட்டும் வயது வரம்பு நிர்ணயித்திருப்பதால் எம்.இ., எம்.டெக்., எம்.எஸ்சி., எம்.ஏ. பட்டதாரிகள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.இந்நிலையில், அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் நியமனத்தில் பொறியியல் பாடங்களுக்கும் (சிவில், மெக்கானிக்கல், எலக்ட் ரானிக்ஸ் கம்யூனிகேஷன் போன் றவை) வயது வரம்பு கொண்டுவர அரசு முடிவு செய்துள்ளது.அதேநேரத்தில், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய பொறியியல் அல்லாத பாடப்பிரிவுகளுக்கு தற்போது இருப்பதைப் போன்று 57 வயதாக நிர்ணயிக்கப்பட உள்ளது.

606 காலியிடங்கள்

அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் விரைவில் 606 விரிவுரையாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். அவர்களை இந்த புதிய வயது வரம்பு தகுதி அடிப்படையில் தேர்வுசெய்ய ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்திருக் கிறது.பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கு பொறியியல் பாடப்பிரிவுகளுக்கு விண்ணப்பிக்கமுதல் வகுப்பில் பி.இ. அல்லது பி.டெக். பட்டமும், பொறியியல் அல்லாத பாடப்பிரிவுகளுக்கு விண்ணப்பிக்க சம்பந்தப்பட்ட பாடத்தில் முதல் வகுப்பில் முதுகலை பட்டமும் பெற்றிருக்க வேண்டும். நெட், ஸ்லெட் தகுதித்தேர்வில் தேர்ச்சிதேவையில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு