Skip to main content

அண்ணா பல்கலை: முதுகலை பொறியியல் படிப்புக்கு சேர்க்கை

சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்தில் முதுகலை பொறியியல் படிப்புக்கு சேர்க்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பல்கலைக்கழக துறை, இணைப்பு கல்லூரிகள், அரசு கல்லூரிகள், அரசு சார்ந்த கல்லூரிகள், சுயநிதி கல்லூரிகள் ஆகியவற்றில் எம்.இ, எம்.டெக்., எம்.ஆர்க்.,
எம்.பிளான் ஆகிய படிப்புகளில் சேர, சேர்க்கைக்கான அறிவிப்பை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

•GATE 2014 பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் பொறியியல்/தொழில்நுட்ப படிப்புக்கு தேர்வு செய்யப்படுவர்.

• அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் TANCET 2014ல் நுழைவுத்தேர்வில் பங்கேற்பது அவசியம்.

விண்ணப்ப படிவ கட்டணமாக பொதுப் பிரிவினருக்கு ரூ.500ம், எஸ்சி, எஸ்டி, எஸ்சிஏ மாணவர்களுக்கு ரூ.250ம் செலுத்தி விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம்.

தபால் மூலம் விண்ணப்பங்களை பெற விண்ணப்ப கட்டணமாக பொதுப்பிரிவினருக்கு ரூ.700ம், மற்ற பிரிவினருக்கு ரூ.450ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிப்பவர் ஆன்லைனில் பதிவு செய்வது அவசியம். ஆன்லைனில் விண்ணப்பங்களை பெற ஜூலை 24ம், பல்கலை வளாகத்தில் விண்ணப்பங்களை பெற ஜூலை 25ம் கடைசி நாளாகும்.

கூடுதல் தகவல்கள் அறிய www.annauniv.edu என்ற இணையதளத்தை பார்க்கலாம்.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு