Skip to main content

தமிழ்ப் பல்கலை.யில் அக்குபஞ்சர் பட்டப்படிப்பு

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் இளநிலை அக்குபஞ்சர் பட்டப்படிப்புத் தொடங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பல்கலைக்கழகத் துணைவேந்தர் ம.திருமலை தெரிவித்திருப்பது:
அக்குபஞ்சர் சிகிச்சை தொடர்பான 3 ஆண்டு கால இளநிலைப் பட்டப்படிப்பு தமிழகத்தில் முதல் முறையாக தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நிகழாண்டு
தொடங்கப்பட்டுள்ளது.
கம்பம் அகாதெமி ஆப் அக்குபஞ்சர் என்ற நிறுவனத்தாரின் உதவியுடன் தொடங்கப்பட்டுள்ள இந்தப் படிப்பு, தொலைநிலைக் கல்வி இயக்ககம் மூலம் நடத்தப்பட உள்ளது. இதற்காக இந்நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் அண்மையில் கையெழுத்தானது.
இந்தப் படிப்புக்கான சேர்க்கை பயிற்சி மையங்கள் தஞ்சாவூர், கம்பம், கோவை, சென்னை, திருப்பூர், ராமநாதபுரம், சேலம் ஆகிய இடங்களில் உள்ளன.
பிளஸ் 2 தேர்ச்சியடைந்தவர்கள் பட்டப்படிப்பின் முதலாமாண்டில் சேர்க்கை பெறலாம். பிளஸ் 2 கல்வித் தகுதியோடு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தின் பட்டயப் பயிற்சியை ஏற்கெனவே நிறைவு செய்தவர்கள் நேரடியாக இரண்டாமாண்டு சேர்க்கை பெறலாம்.
திறந்தவெளிக் கல்வி முறையில் பட்டப்படிப்பு பயின்றவர்களும் அக்குபஞ்சர் பட்டப்படிப்பில் சேரலாம்

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா