Skip to main content

தமிழ்ப் பல்கலை.யில் அக்குபஞ்சர் பட்டப்படிப்பு

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் இளநிலை அக்குபஞ்சர் பட்டப்படிப்புத் தொடங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பல்கலைக்கழகத் துணைவேந்தர் ம.திருமலை தெரிவித்திருப்பது:
அக்குபஞ்சர் சிகிச்சை தொடர்பான 3 ஆண்டு கால இளநிலைப் பட்டப்படிப்பு தமிழகத்தில் முதல் முறையாக தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நிகழாண்டு
தொடங்கப்பட்டுள்ளது.
கம்பம் அகாதெமி ஆப் அக்குபஞ்சர் என்ற நிறுவனத்தாரின் உதவியுடன் தொடங்கப்பட்டுள்ள இந்தப் படிப்பு, தொலைநிலைக் கல்வி இயக்ககம் மூலம் நடத்தப்பட உள்ளது. இதற்காக இந்நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் அண்மையில் கையெழுத்தானது.
இந்தப் படிப்புக்கான சேர்க்கை பயிற்சி மையங்கள் தஞ்சாவூர், கம்பம், கோவை, சென்னை, திருப்பூர், ராமநாதபுரம், சேலம் ஆகிய இடங்களில் உள்ளன.
பிளஸ் 2 தேர்ச்சியடைந்தவர்கள் பட்டப்படிப்பின் முதலாமாண்டில் சேர்க்கை பெறலாம். பிளஸ் 2 கல்வித் தகுதியோடு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தின் பட்டயப் பயிற்சியை ஏற்கெனவே நிறைவு செய்தவர்கள் நேரடியாக இரண்டாமாண்டு சேர்க்கை பெறலாம்.
திறந்தவெளிக் கல்வி முறையில் பட்டப்படிப்பு பயின்றவர்களும் அக்குபஞ்சர் பட்டப்படிப்பில் சேரலாம்

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு