Skip to main content

ரிசர்வ் வங்கியில் உதவியாளர் பணி

வங்கிகளின் வங்கி என அழைக்கப்படும் இந்திய ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ்தான் நாட்டில் உள்ள அனைத்து வங்கிகளும், நிதி
நிறுவனங்களும் இயங்கி வருகின்றன.

மும்பையைத் தலையிடமாகக் கொண்டு செயல்படும் ரிசர்வ் வங்கியின் மண்டல தலைமை அலுவலகங்கள் சென்னை உள்பட 4 இடங்களில் அமைந்துள்ளன.பொதுத்துறை வங்கிகளுக்குத் தேவைப்படும் ஊழியர்களும் அதிகாரிகளும் வங்கிப் பணியாளர் தேர்வு நிறுவனம் (Institute of Banking Personnel Selection-IBPS) என்ற அமைப்பு மூலமாகத் தேர்வுசெய்யப்படுகிறார்கள்.இதில் நாட்டின் மிகப் பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி மட்டும் பணியாளர்களைத் தானே தேர்வு நடத்தித் தேர்வு செய்துகொள்கிறது. இதேபோல், இந்திய ரிசர்வ் வங்கியும் கடைநிலை ஊழியர் முதல் பல்வேறு நிலைகளில் அதிகாரி பணி வரை தானே தேர்வுவைத்துத் தேர்வுசெய்கிறது.அந்த வகையில், இந்திய ரிசர்வ் வங்கி 506 உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தற்போது அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. 

ஏதேனும் ஒரு பாடத்தில் பட்டப் படிப்பு முடித்தவர்கள் உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டியது அவசியம்.எஸ்சி, எஸ்டி வகுப்பினர், மாற்றுத் திறனாளிகள் என்றால் பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருந்தாலே போதும். வயது வரம்பைப் பொருத்தவரையில், 18 முதல் 28-க்குள் இருக்க வேண்டும். எனினும், எஸ்சி, எஸ்டி வகுப்பினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத் திறனாளிகளுக்கு 10ஆண்டுகளும் வயது வரம்பில் சலுகை அளிக்கப்படும்.

எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானோர் தேர்வுசெய்யப்படுவார்கள். எழுத்துத் தேர்வு ஆன்லைனில் செப்டம்பர் மாதம் இறுதி வாரத்தில் நடத்தப்படும். இதில், ரீசனிங், ஆங்கிலம், கணிதம், பொது அறிவு, கணினி அறிவு ஆகிய 5 பகுதிகளில் இருந்து தலா 40 கேள்விகள் வீதம் மொத்தம் 200 வினாக்கள் இடம்பெறும்.ஆப்ஜெக்டிவ் முறையில் கேள்விகள் அமைந்திருக்கும். தவறான பதில்களுக்கு மைனஸ் மார்க் உண்டு. அதாவது 4 கேள்விகளுக்குத் தவறான விடையளித்திருந்தால் ஒரு மதிப்பெண் பறிபோய்விடும். மேற்கண்ட ஒவ்வொரு பிரிவிலும் தனித்தனியே தேர்ச்சி பெறவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.விண்ணப்பிக்க விரும்பும் பட்டதாரிகள் www.rbi.org.in என்ற இணையதளத்தில் ஆன்லைனில் ஆகஸ்ட் 6-ந்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். வேறுவழியில் விண்ணப்பித்தால் ஏற்றுக்கொள்ளப்படாது.

தேர்வுக் கட்டணம் எஸ்சி, எஸ்சி வகுப்பினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.50 மட்டும். ஓபிசி உள்பட மற்றவர்களுக்கு ரூ.450. தேர்வுக் கட்டணத்தை ஆன்லைனிலேயே செலுத்திவிடலாம்.மேலும், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பேங்க் ஆப் இந்தியா, கனரா வங்கி, பேங்க் ஆப் பரோடா,பஞ்சாப் தேசிய வங்கி, சென்டிரல் பேங்க் ஆப் இந்தியா உள்ளிட்ட வங்கிக் கிளைகளிலும் தேர்வுக் கட்டணத்தைச் செலுத்த வசதி செய்யப்பட்டுள்ளது. தேர்வுக் கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தக் கடைசி நாள் ஆகஸ்ட் 6-ந் தேதி. வங்கிகள் மூலம் செலுத்துவதாக இருந்தால் ஆகஸ்ட் 11-ந் தேதிக்குள் செலுத்திவிட வேண்டும்.உதவியாளர் பணிக்கு மாதச் சம்பளம் ஏறத்தாழ ரூ.23 ஆயிரம் கிடைக்கும். பதவி உயர்வுக்கான தேர்வுகள் எழுதி வங்கி அதிகாரி ஆவதற்கு நிறையே வாய்ப்புகள் உள்ளன. ரிசர்வ் வங்கிப் பணியில் நுழைவதற்கு உதவியாளர் தேர்வு அருமையான வாய்ப்பு.

மேலே குறிப்பிடப்பட்ட ரிசர்வ் வங்கியின் இணையதளத்தில் சென்று Home Page பகுதியை கிளிக் செய்து பின்னர் Recruitment என்ற பகுதியை கிளிக் செய்ய வேண்டும். அதன்பிறகு Recruitment to the post of Assistant என்பதை கிளிக் செய்து தேர்வு தொடர்பான விவரங்களை முழுமையாக அறிந்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு