Skip to main content

'சி.இ.டி., நடைமுறையில் விரிவுரையாளர்கள் நியமனம்.

மாநில அரசு கல்லூரிகளில் காலியாக உள்ள, 1,298 விரிவுரையாளர்களை, சி.இ.டி., நடைமுறையின் கீழ், நியமனம் செய்து கொள்ளும் செயல்பாடுகள், இறுதி கட்டத்தில் உள்ளது,” என, உயர்கல்வி துறை அமைச்சர் தேஷ்பாண்டே, மேலவையில் தெரிவித்தார்.
மேலவையில், கேள்வி நேரத்தில், சங்கனூரா (பா.ஜ.,) கேள்விக்கு, பதிலளித்து,
அமைச்சர்தேஷ்பாண்டே கூறியதாவது: விரிவுரையாளர்களை, கர்நாடகா பப்ளிக் சர்வீஸ் கமிஷன் மூலமாக, நியமனம் செய்து கொள்ள வேண்டாம் என, தீர்மானித்துள்ளதால், சி.இ.டி., மூலமாகவே, நியமனம் செய்து கொள்ளும் செயல்பாடுகள் துவங்கப்பட்டது.மாநில அரசு கல்லூரிகளில் காலியாக உள்ள, 1,298 விரிவுரையாளர்களை, சி.இ.டி.,நடைமுறையின் கீழ், நியமனம் செய்து கொள்ளும் செயல்பாடுகள், இறுதி கட்டத்தில் உள்ளது.இது தொடர்பாக, அடுத்த அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்படும் 238 பேராசிரியர்கள், சீனியாரிட்டி அடிப்படையில், கல்லூரி முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே, 200 பேர் பணிக்கு ஆஜராகி விட்டனர். கல்லூரி முதல்வர் பதவிகளை, நேரடியாக நியமித்து கொள்வது தொடர்பாக, பரிசீலிக்கப்படுகிறது. இது தொடர்பான விதிமுறைகளில் திருத்தம் கொண்டு வந்து, 50 சதவீத பதவிகளை, நேரடி நியமனம் மூலமாகவும், மீதமுள்ள, 50 சதவீதகல்லூரி முதல்வர் பதவிகளை, பதவி உயர்வு மூலமாகவும் நியமித்து கொள்ளப்படுவர்.இவ்வாறு அவர் கூறினார்.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு