Skip to main content

பள்ளி குழந்தைகளுக்கு சாலை விழிப்புணர்வு: 'காமிக்' புத்தகம் வெளியிடுகிறது ஐ.ஆர்.சி.,


பள்ளி குழந்தைகளுக்கு, சாலை விதிகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த, இந்தியன் ரோடு காங்கிரஸ் ஐ.ஆர்.சி., சார்பில், இலவச, 'காமிக்' புத்தகம், வரும், 25ம் தேதி வெளியிடப்படுகிறது.
பள்ளிக் குழந்தைகள் மத்தியில், சாலை விதிகள் குறித்த விழிப்புணர்வை
ஏற்படுத்தினால், எதிர்காலத்தில், வெளிநாடுகளைப் போல், போக்குவரத்து கட்டுப்பாடுகளை, இந்தியாவில் அமல்படுத்த முடியும். இதை கருத்தில் கொண்டு, பள்ளி குழந்தைகளுக்கு, சாலை விதிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த, நாடு முழுவதற்குமான சாலை விதிகளை வகுத்தளித்துள்ள, ஐ.ஆர்.சி., முடிவு செய்துள்ளது. இதற்காக, சாலை பாதுகாப்பு விதிகள், விழிப்புணர்வு அடங்கிய புத்தகத்தை தயாரித்துள்ளது. ஒன்பது முதல், 14 வயதுள்ள குழந்தைகளுக்கு, இப்புத்தகம் இலவசமாக வழங்கப்படுகிறது. இம்மாதம், 25ம் தேதி, சி.ஐ.டி., நகர், சென்னை மாநகராட்சி பள்ளியில், இந்த புத்தக வெளியீட்டு விழா நடக்கிறது. ஐ.ஆர்.சி., அதிகாரி ஒருவர் கூறுகையில், 'குழந்தைகள் மனதில், எளிதாக பதியும் வகையில், 'மிக்கி மவுஸ், டொனால்ட் டக்' போன்ற கார்ட்டூன் கதாபாத்திரங்கள் மூலம், 'காமிக்ஸ்' வடிவில் புத்தகம் உருவாக்கப்பட்டுள்ளது' என்றார்.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா