Skip to main content

பள்ளி குழந்தைகளுக்கு சாலை விழிப்புணர்வு: 'காமிக்' புத்தகம் வெளியிடுகிறது ஐ.ஆர்.சி.,


பள்ளி குழந்தைகளுக்கு, சாலை விதிகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த, இந்தியன் ரோடு காங்கிரஸ் ஐ.ஆர்.சி., சார்பில், இலவச, 'காமிக்' புத்தகம், வரும், 25ம் தேதி வெளியிடப்படுகிறது.
பள்ளிக் குழந்தைகள் மத்தியில், சாலை விதிகள் குறித்த விழிப்புணர்வை
ஏற்படுத்தினால், எதிர்காலத்தில், வெளிநாடுகளைப் போல், போக்குவரத்து கட்டுப்பாடுகளை, இந்தியாவில் அமல்படுத்த முடியும். இதை கருத்தில் கொண்டு, பள்ளி குழந்தைகளுக்கு, சாலை விதிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த, நாடு முழுவதற்குமான சாலை விதிகளை வகுத்தளித்துள்ள, ஐ.ஆர்.சி., முடிவு செய்துள்ளது. இதற்காக, சாலை பாதுகாப்பு விதிகள், விழிப்புணர்வு அடங்கிய புத்தகத்தை தயாரித்துள்ளது. ஒன்பது முதல், 14 வயதுள்ள குழந்தைகளுக்கு, இப்புத்தகம் இலவசமாக வழங்கப்படுகிறது. இம்மாதம், 25ம் தேதி, சி.ஐ.டி., நகர், சென்னை மாநகராட்சி பள்ளியில், இந்த புத்தக வெளியீட்டு விழா நடக்கிறது. ஐ.ஆர்.சி., அதிகாரி ஒருவர் கூறுகையில், 'குழந்தைகள் மனதில், எளிதாக பதியும் வகையில், 'மிக்கி மவுஸ், டொனால்ட் டக்' போன்ற கார்ட்டூன் கதாபாத்திரங்கள் மூலம், 'காமிக்ஸ்' வடிவில் புத்தகம் உருவாக்கப்பட்டுள்ளது' என்றார்.

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

முன்னுதாரணமாக விளங்கும் வடமணப்பாக்கம் அரசு தொடக்கப் பள்ளி

எண்ம முறையில் பாடம் கற்றல், குழந்தைகள் நூல்கள் வாசித்தல், கணினிபயிற்சி பெறுதல், அறிவியல் ஆய்வகம் என பல சிறப்பு அம்சங்களுடன் சுகாதாரம், ஒழுக்கம் ஆகியவற்றுடன் சேர்ந்து கல்வி கற்பிக்கப்படுகிறது.