Skip to main content

ஆங்கில வழி கல்வி: பள்ளிகள் விபரம் சேகரிப்பு

ஆங்கில வழி கல்வி: பள்ளிகள் விபரம் சேகரிப்பு - தினமலர்
ஆங்கில வழி கல்வி போதிக்கும் பள்ளிகள் விபரத்தை, வரும் ஜூலை 22 க்குள் தெரிவிக்கும்படி, மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.மெட்ரிக்., பள்ளிகளின் மோகத்தால், அரசு பள்ளிகளில் குறைந்து வரும் மாணவர் எண்ணிக்கையை சரி செய்ய, கடந்த 2012--13 ம்
கல்வியாண்டில், அரசு தொடக்க பள்ளி, உயர்நிலைப்பள்ளிகளில், ஒன்று மற்றும் ஆறாம் வகுப்பில் ஆங்கில வழிக்கல்வி ஆரம்பிக்கப்பட்டது. ஆனால், இதற்கென, தனி ஆசிரியர்களோ, வகுப்பறைகளோ ஏற்படுத்தப்படவில்லை.

இந்நிலையில், தமிழ் வழிக்கல்வி படிக்க விண்ணப்பிக்கும் மாணவர்களும், ஆங்கில வழி கல்விக்கு மாற்றப்பட்டனர். பல தொடக்க பள்ளிகளில் தமிழ் வழி கல்விக்கு மாணவர் சேர்க்கை பெயரளவில் மட்டுமே கசெய்திஉள்ளது. இந்நிலையில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், ஆங்கில வழி கல்வி உள்ள பள்ளிகளின் மற்றும் மாணவர்களின் எண்ணிக்கை விபரத்தை, சேகரித்து வரும் ஜூலை 22 க்குள், மாநில தொடக்க கல்வி இயக்குனரகத்துக்கு, அனுப்ப, உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு