Skip to main content

பொது அறிவு தகவல்கள் இன்று

• 'பாக்ஸைட்' அதிகமாகத் தயாரிக்கும் இந்திய மாநிலம் எது?

விடை: ஒரிஸ்ஸா

• லெவியாதன் என்னும் நூலின் ஆசிரியர் யார்?


விடை: தாமஸ் ஹாட்ஸ்

• அரேபியப் புவியியலின் தந்தை என ஆராதிக்கப் பெறுபவர் யார்?

விடை: ஐகௌபி

• குட்டித் திருவாசகம் என்று போற்றப்பெறும் நூல் எது?

விடை: திருக்கருவைப் பதிற்றுப் பத்து அந்தாதி

• பிரம்ம விந்திய பத்திரிகை ஆசிரியர் யார்?

விடை: சிதம்பரம் கு.ஸ்ரீனிவாச சாஸ்திரி (1886)

• மதுரைத் தமிழ்ச் சங்கத்தைத் தோற்றுவித்தவர் யார்?

விடை:பாண்டித்துரைத் தேவர் 1901

• ஜார்ஜ் டபிள்யு புஷ் என்ற பெயரில் டபிள்யு எதனைக் குறிக்கிறது?

விடை: வாக்கர்

• காபி உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு எது?

விடை: பிரேஸில்

• இராணுவ வீரர்களுக்கு வீடுகள் வழங்கும் திட்டத்தில் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி முதல்வர் பதவி விலகிய மாநிலம் எது?

விடை: மகாராஷ்டிரா

• அரிசி உற்பத்தியில் இந்தியா எத்தனையாவது இடத்தில் உள்ளது?

விடை: 2-வது இடம்

• வாக்காளர் அடையாள அட்டையை அறிமுகப்படுத்திய தேர்தல் ஆணையர் யார்?

விடை: டி.என்.சேஷன்

• நவீன ஓவியத்தின் தந்தை என்று புகழப்படுபவர் யார்?

விடை: ஸ்பெயின் நாட்டைச் சார்ந்த மாபிலோ பிகாஸோ

• ராக்கெட்டின் தந்தை என்ற பாராட்டினைப் பெற்றவர் யார்?

விடை: கோடர்ட்

• கர்மவீரர், பெருந்தலைவர், காலா காந்தி என்று புகழ் பெற்ற அரசியல் தலைவர் யார்?

விடை: காமராசர்

• சிற்றிதழ் உலகில் சுவடு பதித்த 'விவேக பானு' என்ற இலக்கிய இதழின் ஆசிரியர் யார்?

விடை: சி.வி சுவாமிநாதய்யர்

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு