Skip to main content

டிசம்பருக்குள் பயோ-மெட்ரிக் குடும்ப அட்டைகள்?

பயோ-மெட்ரிக் குடும்ப அட்டைகள் எப்போது வழங்கப்படும் என்பது குறித்து உணவுத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ் விளக்கம் அளித்தார்.

சட்டப்பேரவையில் கூட்டுறவு, உணவு, நுகர்வோர் பாதுகாப்புத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
எம்.எல்.ஏ. லாசர் பேசினார். அப்போது பயோ-மெட்ரிக் குடும்ப அட்டைகள் வழங்கப்படுவது குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு அமைச்சர் காமராஜ் அளித்த பதில்:

வரும் டிசம்பருக்குள் பயோ-மெட்ரிக் குடும்ப அட்டைகளை அளிப்பதற்கு தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனாலும், அவற்றை வழங்குவதில் தாமதம் ஏற்படக் காரணம், மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரங்கள் முழுமையாகக் கிடைக்காததே. இந்த கணக்கெடுப்பின் விவரங்களை வைத்தே பயோ- மெட்ரிக் குடும்ப அட்டைகள் தயாரிக்கப்பட உள்ளன.

இதுபோன்ற மக்கள் தொகை கணக்கெடுப்பை தமிழகத்தில் மேற்கொள்வதற்கு ரூ.73 கோடி செலவாகும். எனவே, மத்திய அரசு தயாரித்து வரும் மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரங்களின் அடிப்படையில் பயோ-மெட்ரிக் குடும்ப அட்டைகளைத் தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மத்திய அரசின் மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணிகள் 73 சதவீதம் முடிந்துள்ளன. மீதமுள்ள பணிகள் வரும் டிசம்பருக்குள் முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பிறகு பயோ-மெட்ரிக் குடும்ப அட்டைகள் வழங்கும் பணிகள் தொடங்கப்படும் என்று அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு