Skip to main content

ஆக.5 இல் கள்ளர் சீரமைப்பு பள்ளி ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கவுன்சலிங்

கள்ளர் சீரமைப்பு பள்ளி ஆசிரியர்கள், விடுதி காப்பாளர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு ஆக.5 ஆம் தேதி நடைபெறுகிறது.
 கள்ளர் சீரமைப்பு இணை இயக்குநர் அலுவலக நிர்வாகத்தின்கீழ் மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் இயங்கி வரும் அரசு கள்ளர் பள்ளி ஆசிரியர்கள், விடுதி காப்பாளர்களுக்கு நடப்பு கல்வி ஆண்டுக்கான கலந்தாய்வு
மதுரையில் உள்ள கள்ளர் பள்ளி இணை இயக்குநர் அலுவலகத்தில் ஆக.5 ஆம் தேதி நடைபெறுகிறது.

 காலை 9.30 மணி முதல் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர், முதுகலைப்பட்டதாரி ஆசிரியர், உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர், நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் என்ற வரிசைப்படி மாறுதல் மற்றும் பதவிஉயர்வு கலந்தாய்வு நடைபெறும். அதைத் தொடர்ந்து தமிழாசிரியர், பட்டதாரி ஆசிரியர், விடுதிக் காப்பாளர் மாறுதல் கலந்தாய்வு நடைபெறும்.
 பிற்பகல் 1.30 முதல் தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியர் மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு, இடைநிலை ஆசிரியர், இடைநிலை காப்பாளர், சிறப்பு ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு நடைபெறும். முன்னுரிமை உள்ளோர் உரிய சான்றுகளுடன், கலந்தாய்வுக்கு முன்னதாகச் சமர்ப்பிக்கும்பட்சத்தில் அவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா