Skip to main content

ஆக.5 இல் கள்ளர் சீரமைப்பு பள்ளி ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கவுன்சலிங்

கள்ளர் சீரமைப்பு பள்ளி ஆசிரியர்கள், விடுதி காப்பாளர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு ஆக.5 ஆம் தேதி நடைபெறுகிறது.
 கள்ளர் சீரமைப்பு இணை இயக்குநர் அலுவலக நிர்வாகத்தின்கீழ் மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் இயங்கி வரும் அரசு கள்ளர் பள்ளி ஆசிரியர்கள், விடுதி காப்பாளர்களுக்கு நடப்பு கல்வி ஆண்டுக்கான கலந்தாய்வு
மதுரையில் உள்ள கள்ளர் பள்ளி இணை இயக்குநர் அலுவலகத்தில் ஆக.5 ஆம் தேதி நடைபெறுகிறது.

 காலை 9.30 மணி முதல் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர், முதுகலைப்பட்டதாரி ஆசிரியர், உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர், நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் என்ற வரிசைப்படி மாறுதல் மற்றும் பதவிஉயர்வு கலந்தாய்வு நடைபெறும். அதைத் தொடர்ந்து தமிழாசிரியர், பட்டதாரி ஆசிரியர், விடுதிக் காப்பாளர் மாறுதல் கலந்தாய்வு நடைபெறும்.
 பிற்பகல் 1.30 முதல் தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியர் மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு, இடைநிலை ஆசிரியர், இடைநிலை காப்பாளர், சிறப்பு ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு நடைபெறும். முன்னுரிமை உள்ளோர் உரிய சான்றுகளுடன், கலந்தாய்வுக்கு முன்னதாகச் சமர்ப்பிக்கும்பட்சத்தில் அவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு