Skip to main content

டி.என்.பி.எஸ்.சி.,யின் ஒரு தேர்வுக்கு 3 முடிவுகளா?:விளக்கம் கேட்கிறது ஐகோர்ட்..

பொறியாளர்கள் நியமனத்திற்கு டி.என்.பி.எஸ்.சி., நடத்திய ஒருதேர்வுக்கு, அதன் முடிவுகள் அடங்கிய பட்டியலை மூன்று முறை வெளியிட்டு குளறுபடி நடந்துள்ளதாக தாக்கலான வழக்கில், அரசுத் தரப்பில் விளக்கம் பெற்று தெரிவிக்க, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
முதுகுளத்தூர் செந்தில்குமார் தாக்கல் செய்த மனு:டி.என்.பி.எஸ்.சி., 2012 டிச., 24 ல் அறிவிப்பு வெளியிட்டது. அதில்,'பொதுப்பணித்துறை, ஊரக
வளர்ச்சித்துறையில் உதவி பொறியாளர்கள், தொழில் நுட்ப உதவி ஆய்வாளர், இளநிலை மின் ஆய்வாளர் உட்பட ஒருங்கிணைந்த பொறியாளர்கள் நேரடி நியமனத்திற்கு விண்ணப்பிக்கலாம்,' என குறிப்பிடப்பட்டது. நான் பி.இ.,(சிவில்) படித்துள்ளேன். 2013 மார்ச் 2 ல் தேர்வு நடந்தது. அக்.,4 ல் தேர்வு முடிவு வெளியானதில், மொத்தம் 32 ஆயிரத்து 969 பேரில் 652 பேர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. பின், அப்பட்டியலை டி.என்.பி.எஸ்.சி., ரத்து செய்தது. 2014 ஜன., 30 ல் புதிய பட்டியல் வெளியானது. இவ்விரு பட்டியல்களிலும் என் பெயர் இடம் பெற்றது. ஜூலை 7 ல் 554 பேரின் பதிவு எண்கள் அடங்கிய புதிய பட்டியல் வெளியிட்டனர். இதில், என் பெயர் இல்லை.ஏற்கனவே வெளியான இரு பட்டியல்களில் இல்லாத 11 பேரின் பெயர்கள், மூன்றாவது பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

இதில் முறைகேடு நடந்துள்ளது. ஜூலை 22, 25 மற்றும் 28 ல் நேர்காணல் நடக்கிறது.மூன்றாவது பட்டியல் அடிப்படையில் நேர்காணல் நடத்த தடை விதிக்க வேண்டும். மூன்றாவது பட்டியலை ரத்து செய்ய வேண்டும். என் பெயரை பட்டியலில் சேர்த்து, நியமனம் மேற்கொள்ள உத்தரவிட வேண்டும், என குறிப்பிட்டார். புதுக்கோட்டை இளங்கோவனும் இதுபோல மனு செய்தார்.நீதிபதிகே.கே.சசிதரன், "டி.என்.பி.எஸ்.சி., செயலாளர் மற்றும் தேர்வு கட்டுப்பாட்டாளரிடம் விளக்கம் பெற்று, ஜூலை 21 ல் தெரிவிக்க வேண்டும்,” என்றார்.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு