Skip to main content

எம்.எட். மாணவர் சேர்க்கைக்கு ஆகஸ்ட் 31ம் தேதி நுழைவுத்தேர்வு

திருச்சி பாரதிதாசன் பல்கலைகழகத்தில், எம்.எட்., வகுப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு, ஆகஸ்ட் 31ம் தேதி நுழைவுத்தேர்வு நடக்கிறது.
பல்கலைகழக தொலைநிலை கல்வி மையம் சார்பில், 2014-15 ஆண்டிற்கான முதுநிலை கல்வியில், (எம்.எட்.,) படிப்புக்கு விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு
வருகிறது. இளம் கல்வியியலில் (பி.எட்.,) 50 சதவீத மதிப்பெண் பெற்று, அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் இரண்டாண்டு அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள் மட்டும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பங்களை, பாரதிதாசன் பல்கலை தொலை நிலை கல்வி மையத்திலும், உறுப்பு கல்லூரிகளிலும், அனைத்து பயிற்சி மையங்கள் மற்றும் படிப்பு மையங்களிலும் வழங்கப்படும். 500 ரூபாய்க்கான டி.டி., வழங்கி பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்பத்தை, பல்கலை இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்தால், 500 ரூபாய்க்கான டி.டி., யுடன் இணைத்து அனுப்ப வேண்டும்.
விண்ணப்பங்களை பெற ஆகஸ்ட், 14ம் தேதி வரை அவகாசம் உண்டு. நுழைவு தேர்வு ஆகஸ்ட், 31 ம்தேதி நடக்கிறது. மேலும், விவரங்களுக்கு 0431-2407027, 2407054 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்