Skip to main content

எம்.எட். மாணவர் சேர்க்கைக்கு ஆகஸ்ட் 31ம் தேதி நுழைவுத்தேர்வு

திருச்சி பாரதிதாசன் பல்கலைகழகத்தில், எம்.எட்., வகுப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு, ஆகஸ்ட் 31ம் தேதி நுழைவுத்தேர்வு நடக்கிறது.
பல்கலைகழக தொலைநிலை கல்வி மையம் சார்பில், 2014-15 ஆண்டிற்கான முதுநிலை கல்வியில், (எம்.எட்.,) படிப்புக்கு விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு
வருகிறது. இளம் கல்வியியலில் (பி.எட்.,) 50 சதவீத மதிப்பெண் பெற்று, அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் இரண்டாண்டு அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள் மட்டும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பங்களை, பாரதிதாசன் பல்கலை தொலை நிலை கல்வி மையத்திலும், உறுப்பு கல்லூரிகளிலும், அனைத்து பயிற்சி மையங்கள் மற்றும் படிப்பு மையங்களிலும் வழங்கப்படும். 500 ரூபாய்க்கான டி.டி., வழங்கி பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்பத்தை, பல்கலை இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்தால், 500 ரூபாய்க்கான டி.டி., யுடன் இணைத்து அனுப்ப வேண்டும்.
விண்ணப்பங்களை பெற ஆகஸ்ட், 14ம் தேதி வரை அவகாசம் உண்டு. நுழைவு தேர்வு ஆகஸ்ட், 31 ம்தேதி நடக்கிறது. மேலும், விவரங்களுக்கு 0431-2407027, 2407054 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா