Skip to main content

பி.இ., கலந்தாய்வு தினமும் கூடுதலாக 2,000மாணவர்களுக்கு அழைப்பு.

பி.இ., கலந்தாய்வு முடியும் தேதி நெருங்குவதால் தினமும் கூடுதலாக 2,000மாணவர்களுக்கு அழைப்பு.

இன்னும், 11 நாளில், பி.இ., கலந்தாய்வை முடிக்க வேண்டும் என்பதால், கலந்தாய் விற்கு அழைக்கப்படும் மாணவர் எண்ணிக்கையை, கணிசமாக, அண்ணா பல்கலை அதிகரித்துள்ளது. 
தினமும், 5,000 மாணவர்கள் அழைக்கப்பட்ட நிலையில், நேற்று முன்தினம்,
7,000 மாணவர்களுக்கு, அண்ணா பல்கலை அழைப்பு விடுத்தது. பி.இ., பொதுப்பிரிவு கலந்தாய்வு, கடந்த 7ம் தேதி துவங்கியது. 'ஆகஸ்ட் 4ம் தேதி வரை, கலந்தாய்வு நடக்கும்' என, அண்ணா பல்கலை அறிவித்துள்ளது. இதற்கு இன்னும், 11 நாட்களே உள்ளன. ஏ.ஐ.சி.டி.இ., (அகில இந்திய தொழில்நுட்ப கல்வி குழு), 'நாடு முழுவதும், ஆகஸ்ட் 1ம் தேதி, பி.இ.,முதலாம் ஆண்டு வகுப்புகள் துவங்க வேண்டும்' என, ஏற்கனவே உத்தரவிட்டு உள்ளது. இதனால், அனைத்து பொறியியல் கல்லூரி நிர்வாகிகளும், ஆக., 1ம் தேதியில் இருந்து, வகுப்புகளை துவக்க, தயாராகி வருகின்றனர்.கலந்தாய்வு மூலம் தனியார் கல்லூரிகளில், 'சீட்' எடுத்த மாணவர்கள், கல்லூரியை அணுகி, கட்டண விவரங்களையும், கல்லூரி திறக்கும் தேதி விவரங்களையும் கேட்டு வருகின்றனர்.

இவை அனைத்தையும் கவனத்தில் கொண்டுள்ள அண்ணா பல்கலை, குறித்த தேதியில், கலந்தாய்வை முடிக்கும் வகையில், கலந்தாய்வுக்கு அழைக்கப்படும் மாணவர் எண்ணிக்கையை, நேற்று முன்தினத்தில் இருந்து, கணிசமாக அதிகரித்து உள்ளது. கடந்த22ம் தேதி, 5,093 பேர் அழைக்கப்பட்ட நிலை யில், நேற்று முன்தினம், 6,938 பேர் அழைக்கப்பட்டனர். 2,000 பேர், கூடுதலாக அழைக்கப் பட்டனர். இதே அளவில், வரும் நாட்களிலும், மாணவர் அழைக்கப் படுவர் என, பல்கலை வட்டாரம் தெரிவித்தது. பி.இ., படிப்பில் சேர, 1.68 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். இவர்கள் அனைவரையும் கருத்தில்கொண்டே, கலந்தாய்வு அட்டவணையை, பல்கலை தயாரித்தது. 23ம் தேதி வரை முடிந்த, 16 நாள் கலந்தாய்வில், 86,039 பேர் அழைக்கப்பட்டு உள்ளனர். அடுத்த 11 நாளில், 81,961 பேர், கலந்தாய்விற்கு அழைக்கப்பட உள்ளனர்.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்