Skip to main content

சென்னையில் உறைவிடப் பள்ளி விரைவில் தொடக்கம்

மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான மாநகராட்சி உண்டு உறை விடப் பள்ளிகள் சென்னையில் விரைவில் தொடங்கப்பட உள்ளன.

சென்னை மாநகராட்சியின் 32 மேல்நிலைப் பள்ளிக ளிலும் உண்டு உறைவிடப் பள்ளி அமைக்க திட்டமிடப் பட்டுள்ளது. இதில் முதல் கட்டமாக
சைதாப்பேட்டை ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, சைதாப்பேட்டை பெண்கள் மேல்நிலைப் பள்ளி, புல்லா அவென்யூ பெண்கள் மேல்நிலைப் பள்ளி, ஆகிய பள்ளிகளில் இதனை தொடங்க முடிவு செய்யப் பட்டுள்ளது.

ஏற்கெனவே இருக்கும் பள்ளி கட்டிடங்களின் மீது விடுதிகள் கட்டப்பட உள்ளன. இங்கு மாணவர்களுக்கான தங்கும் வசதி, உணவு வசதி அனைத்தும் மாநகராட்சியால் செய்யப்படுகிறது. இந்த விடுதிகளுக்கான காப்பாளர் களும் நியமிக்கப்பட உள்ளனர்.

அனைத்து மாணவர்க ளுக்கும் இது கட்டாயம் இல்லை என்றபோதிலும் பலர் இந்த விடுதியில் தங்க முன்வருவார்கள் என்று மாநகராட்சி எதிர்பார்க் கிறது.

இது குறித்து மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்களிடம் மாநகராட்சி கல்வித் துறை அதிகாரிகள் பேசவுள்ளனர்.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா