Skip to main content

காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களில் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் நியமனம்

"மாணவர்களின் நலன் கருதி அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களில், ஓய்வு தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்" என, மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி
ஜெயக்குமார் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது: அனைத்து அரசு பள்ளிகளிலும், பள்ளிக் கல்வி மேம்பாட்டு குழு செயல்படுகிறது. இதன் தலைவர் கலெக்டர். மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி, மாவட்ட கல்வி அதிகாரி, தலைமையாசிரியர் உள்ளிட்டோர் உறுப்பினர்கள் ஆவர். இதன் ஆய்வுக்கூட்டம் மாதந்தோறும் நடத்தப்பட்டு பள்ளிகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது உள்ளிட்டவை மேற்கொள்ளப்படும்.

மாணவர்களின் நலன்கருதி மாவட்டத்தில் அரசுப்பள்ளிகளில் காலியாகவுள்ள ஆசிரியர் பணியிடங்களில் ஓய்வு பெற்ற தலைமையாசிரியர்கள் 15 பேர் மற்றும் 5 முதுகலை ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். அதற்கான ஒப்புதல் கேட்டு கலெக்டருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அவர்கள் மாணவர்களுக்கு பாடம் நடத்துவது மட்டுமின்றி, ஒழுக்கத்தை கற்றுத்தந்து அதிக மதிப்பெண் பெற ஆலோசனைகளை வழங்குவர். ஆனால் அவர்களுக்கு ஊதியம் எதுவும் வழங்கப்படமாட்டாது. சேவை அடிப்படையில் இப்பணியினை செய்ய அவர்கள் தயாராக உள்ளனர்.

ஆசிரியர் பயிற்றுநர்களுக்கான பணி நிரவல் கவுன்சிலிங் நேற்று நடந்தது. அதில், உபரியாக இருந்த 13 பேர், நாகை மாவட்டத்திற்கு இடமாறுதலுக்கான உத்தரவு வழங்கப்பட்டது. உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கவுன்சிலிங் ஜூன் 29 வரை விருதுநகர் கே.வி.எஸ். மெட்ரிக். பள்ளியில் நடக்கிறது.

மழைநீர் சேகரிப்பின் அவசியத்தை வலியுறுத்தி மாவட்ட அளவிலான மாணவ, மாணவியருக்கான ஓவியப்போட்டி விருதுநகர் ஷத்திரிய பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இன்று நடக்கிறது. கலெக்டர் ஹரிஹரன் துவக்கி வைக்கிறார், என்றார்.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு