பத்தாம் வகுப்பு உடனடி தேர்வுக்கு, 'ஹால் டிக்கெட்' கிடைக்காத மாணவர்கள், தேர்வு கட்டணம் செலுத்திய பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் இருந்து, கடிதம் பெற்று, மாவட்ட கல்வி அலுவலகங்களில் சமர்ப்பிக்க வேண்டும்' என, தேர்வுத் துறை அறிவித்துள்ளது. அதன் விவரம்: நாளை (23ம் தேதி) முதல் 10ம் வகுப்பு உடனடி தேர்வு துவங்குகிறது. இதற்கு விண்ணப்பித்த மாணவர்கள், 19ம்
தேதியில் இருந்து, 'ஹால் டிக்கெட்'டை, தேர்வுத் துறை இணையதளம் வழியாக, பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என, தெரிவிக்கப்பட்டது. எனினும், பல மாணவர்கள், 'ஹால் டிக்கெட்' கிடைக்கவில்லை என்றும், பதிவிறக்கம் செய்ய முடியவில்லை என்றும், தெரிவிக்கின்றனர். இப்படிபட்ட மாணவர்கள், எந்த பள்ளியில், தேர்வு கட்டணத்தை செலுத்தினார்களோ, அந்த பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் இருந்து, 'இந்த மாணவர், தேர்வு கட்டணம் செலுத்தி உள்ளார்; உடனடி தேர்வை எழுத, தகுதி பெற்றவர்' என, கடிதம் பெற்று, அதை, மாவட்ட கல்வி அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். அப்போது, 'ஹால் டிக்கெட்'டில், ஒரு புகைப்படத்தை ஒட்டிவிட்டு, மற்றொரு புகைப்படத்தை, தேர்வு மையத்தில் ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு, தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.
கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...