Skip to main content

பவர் கிரிட் கார்ப்பரேஷனில் பொறியாளர் பணி

இந்திய எரிசக்தி துறையின் கீழ் புதுதில்லியில் செயல்பட்டு வரும் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான இந்திய பவர் கிரிட் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: துணை மேலாளர்: (எலக்ட்ரிக்கல்)

காலியிடங்கள்: 05

கல்வித் தகுதி: 60 சதவிகித மதிப்பெண்களுடன் எலக்ட்ரிக்கல் துறையில் பி.இ
அல்லது பி.டெக், பி.எஸ்சி (பொறியியல்) ஏஎம்ஐஇ அல்லது அதற்கு சமமான கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 27.06.2014 தேதியின்படி 39க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.32,990 - 58,000.

பணி: முதுநிலை பொறியாளர்: (எலக்ட்ரிக்கல்)

காலியிடங்கள்: 10

கல்வித் தகுதி: பவர்சிஸ்டம் அனலிசிஸ் அல்லது பவர் சிஸ்டம் பொறியியல் பாடத்தில் எம்.டெக்., அல்லது பி.எச்டி முடித்திருக்க வேண்டும்

வயது வரம்பு: 27.06.2014 தேதியின்படி 36க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.29,100 - 54,500.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.400. இதனை 'Power Grid Corporation' என்ற பெயருக்கு புதுதில்லியில் மாற்றத்தக்க வகையில் ஏதாவதொரு வங்கியில் டிடியாக எடுக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் கட்டணம் செலுத்த தேவையில்லை.

விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் www.powergridindia.com என்ற இணையதளத்தின் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பித்த பிரிண்ட் அவுட் அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

Power Grid Corporation of India Limited,

B9, Qutab Institutional Area,

Katwariasarai,

NEWDELHI 110 016.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 27.06.2014.

ஆன்லைன் பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 11.07.2014.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.powergridindia.com என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு