Skip to main content

ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) ஏற்க மறுத்த பாடத்தை, திண்டுக்கல் அரசு மகளிர் கல்லூரி நிர்வாகம் மாற்றியமைக்க முடிவு செய்துள்ளது.


திண்டுக்கல் எம்.வி.எம்., அரசு மகளிர் கலைகல்லூரியில், பி.எஸ்.சி., விலங்கியல் தொழிற்கல்வி பாடப்பிரிவில், ஆண்டிற்கு 32 மாணவிகள்
படிக்கின்றனர்.

இந்த பாடம்படித்த 100 பேர், ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றனர். ஆனால், அவர்களுக்கு பி.எஸ்.சி., விலங்கியல் தொழிற்கல்வி, பி.எஸ்.சி., விலங்கியலுக்கு சமமானது என்பதற்கான அரசாணைஇல்லை என்று கூறி, ஆசிரியர் பணி தர டி.ஆர்.பி., மறுத்துவிட்டது. பாதிக்கப்பட்டவர்கள் திண்டுக்கல் கலெக்டர்வெங்கடாசலத்திடம் புகார் அளித்தனர். இதையடுத்து, பாடப்பிரிவை மாற்றியமைக்க எம்.வி.எம்., அரசு கல்லூரி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

கல்லூரி முதல்வர் பத்மலதா கூறியதாவது: எங்கள் கல்லூரியில் பல ஆண்டுகளாக பி.எஸ்.சி., விலங்கியல் தொழிற்கல்வி பாடம் இருந்து வருகிறது. தற்போது, டி.ஆர்.பி., ஏற்க மறுத்துள்ளதால், அதனை பி.எஸ்.சி.,விலங்கியல் பாடமாக மாற்றியமைக்க கொடைக்கானல் அன்னை தெரசா பல்கலை மூலம் நடவடிக்கை எடுத்துள்ளோம். மேலும், ஏற்கனவே படித்தவர்கள் பாதிக்காத வகையில், பி.எஸ்.சி.,விலங்கியல் தொழிற்கல்வி, பி.எஸ்.சி.,விலங்கியலுக்கு சமமானது என்பதற்கான அரசாணை வெளியிடவும் தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளோம், என்றார். விலங்கியல் தொழிற்கல்வி துறைத்தலைவர் பவானி உடனிருந்தார்.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா