Skip to main content

முடிவெடுப்பதற்கு ஒரு வாரகாலம் அவகாசம் அளித்தது உச்சநீதிமன்றம்.

ஏ.ஐ.சி.டி.இ., (அகில இந்திய தொழில்நுட்ப கல்வி குழு)யிடம், ஏற்கனவே இயங்கிவரும் தொழில்நுட்ப கல்லுாரிகள், பல்வேறு பாட பிரிவுகளுக்கு அனுமதி கேட்டும், பல புதிய கல்லுாரிகள், அனுமதி கேட்டும், 7,280
விண்ணப்பங்களை சமர்ப்பித்து இருந்தன.

இதில், 6,751 விண்ணப்பங்களை பரிசீலனை செய்து, ஏ.ஐ.சி.டி.இ., முடிவை எடுத்துவிட்டது. 

கல்லுாரி கால அட்டவணையின்படி, நிலுவையில் உள்ள, 529 விண்ணப்பங்கள் மீது, ஜூன் 10ம் தேதிக்குள் முடிவை எடுக்க முடியாத நிலையை சுட்டிக்காட்டி, சம்பந்தப்பட்ட விண்ணப்பங்களுக்கு அனுமதி வழங்குவதற்கு வசதியாக,ஒரு வாரம் கால அவகாசம் கேட்டு, உச்சநீதிமன்றத்தில், ஏ.ஐ.சி.டி.இ., மனுதாக்கல் செய்தது.இந்த மனு, உச்சநீதிமன்றத்தின் விடுமுறை கால நீதிமன்றம் முன், விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் விக்ரமஜித் சென் மற்றும் சிவகீர்த்தி சிங் ஆகியோர் அடங்கிய, டிவிஷன் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவு: ஏ.ஐ.சி.டி.இ., கோரிக்கை ஏற்கப்படுகிறது. அதன்படி, முதல்கட்ட கலந்தாய்வு, ஜூன் 30 என இருந்தது, ஜூலை,15 வரை நீட்டிக்கப்படுகிறது.இரண்டாம் கட்ட கலந்தாய்வை, ஜூலை 22 தேதி வரையும், மூன்றாம் கட்ட கலந்தாய்வை,ஜூலை 29ம் தேதிக்குள்ளும் முடிக்க வேண்டும். பொறியியல் வகுப்புகள், ஆகஸ்ட் 1ம் தேதி துவங்க வேண்டும்.

கல்லுாரிகளில், பல்வேறு பிரிவுகளில், நிரம்பாத இடங்கள் இருந்தால், அவற்றை, ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் நிரப்பிக் கொள்ளலாம். ஏ.ஐ.சி.டி.இ., வழங்கும் அனுமதிக்குப்பின், சம்பந்தபட்ட கல்வி நிறுவனங்களுக்கு, இணைப்பு அங்கீகாரம் வழங்குவது குறித்து, சம்பந்தப்பட்ட மாநில அரசுகள், பல்கலைகள், ஒரு வாரத்திற்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.புதிய கல்லுாரிகளை, கலந்தாய்வு பட்டியலில் சேர்க்க, சம்பந்தபட்ட மாநில அரசுகள்,பல்கலைகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த காரணங்களுக்காகத்தான், கலந்தாய்வு தள்ளி வைக்கப்படுகிறது. இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவை பிறப்பித்தனர்.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா