Skip to main content

தடகள திறனாய்வு போட்டிகளை நடத்துவது யார்: மேம்பாட்டு ஆணையம், கல்வித்துறை முரண்பாடு.

தடகள திறனாய்வு போட்டிகளை நடத்துவது யார்: மேம்பாட்டு ஆணையம், கல்வித்துறை முரண்பாடு.

உலகத் திறனாய்வு தடகளப் போட்டிகள், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், மாவட்ட விளையாட்டு அலுவலகம் மூலம் நடத்தப்படுகிறது. 
கிராமப்புற இளைஞர்களுக்கான ஆணையம், பள்ளி மாணவர்களுக்குபோட்டிகள் நடத்துவதால், குழப்பம் ஏற்படுகிறது. கிராமப்புற
இளைஞர்களின் விளையாட்டுத் திறனை ஊக்கப்படுத்தும் வகையில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுஆணையம் அமைக்கப்பட்டது. ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள விளையாட்டு அலுவலகம் மூலம், கிராமப்புற இளைஞர்களுக்கு விளையாட்டுப் போட்டிகள், மத்திய அரசின் 'பைக்கா' விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதுதவிர, ஆறு முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான உலக தடகளத் திறனாய்வு போட்டிகள் நடத்தப்படுகின்றன.

ஆறாம் வகுப்பு, ஏழு, எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு தனியாக போட்டிகள் வைத்து, திறமையான மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர். பெரும்பாலான மாவட்ட விளையாட்டு அலுவலகங்களுக்கும், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் அலுவலகத்திற்கும் தொடர்பில்லாத நிலையே உள்ளது. திறனாய்வு போட்டி நடத்துவதற்கு சில நாட்களுக்கு முன், தகவலுக்காக உடற்கல்வி ஆய்வாளர்களிடம் தெரிவிக்கின்றனர்.மிகக்குறுகிய நாட்களுக்குள் மாவட்டத்தில் உள்ள அத்தனை பள்ளிகளுக்குள் சுற்றறிக்கை அல்லது போன் மூலம் தகவல் தெரிவிக்க இயலாது. எனவே, ஒருசில பள்ளி மாணவர்களைக் கொண்டு போட்டிகள் நடத்தி, அதிலிருந்து தேர்வு செய்து சிறப்புப் பயிற்சி அளிக்கின்றனர். திறமையான, தகுதியான அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த தடகள வீரர், வீராங்கனைகளுக்கு போட்டிகள் குறித்து தெரியாததால், அருமையான வாய்ப்பை இழக்கின்றனர்.

பள்ளிக் கல்வித்துறை சார்பில் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் அலுவலகம் மூலம் குறுவட்ட, மாவட்ட, மண்டல அளவிலான 14, 17 மற்றும் 19 வயதுக்குட்பட்டோருக்கான தடகளப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. உலகத் திறனாய்வு தடகளப் போட்டிகளை நடத்துவதற்கான நிதியை தனியாக அனுப்பினால், பள்ளிக் கல்வித்துறை மூலமே இப்போட்டிகளை நடத்தி திறமையான மாணவர்களை தேர்வு செய்ய முடியும். அரசு இதுகுறித்து பரிசீலனை செய்ய வேண்டும்.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா