Skip to main content

தடகள திறனாய்வு போட்டிகளை நடத்துவது யார்: மேம்பாட்டு ஆணையம், கல்வித்துறை முரண்பாடு.

தடகள திறனாய்வு போட்டிகளை நடத்துவது யார்: மேம்பாட்டு ஆணையம், கல்வித்துறை முரண்பாடு.

உலகத் திறனாய்வு தடகளப் போட்டிகள், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், மாவட்ட விளையாட்டு அலுவலகம் மூலம் நடத்தப்படுகிறது. 
கிராமப்புற இளைஞர்களுக்கான ஆணையம், பள்ளி மாணவர்களுக்குபோட்டிகள் நடத்துவதால், குழப்பம் ஏற்படுகிறது. கிராமப்புற
இளைஞர்களின் விளையாட்டுத் திறனை ஊக்கப்படுத்தும் வகையில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுஆணையம் அமைக்கப்பட்டது. ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள விளையாட்டு அலுவலகம் மூலம், கிராமப்புற இளைஞர்களுக்கு விளையாட்டுப் போட்டிகள், மத்திய அரசின் 'பைக்கா' விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதுதவிர, ஆறு முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான உலக தடகளத் திறனாய்வு போட்டிகள் நடத்தப்படுகின்றன.

ஆறாம் வகுப்பு, ஏழு, எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு தனியாக போட்டிகள் வைத்து, திறமையான மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர். பெரும்பாலான மாவட்ட விளையாட்டு அலுவலகங்களுக்கும், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் அலுவலகத்திற்கும் தொடர்பில்லாத நிலையே உள்ளது. திறனாய்வு போட்டி நடத்துவதற்கு சில நாட்களுக்கு முன், தகவலுக்காக உடற்கல்வி ஆய்வாளர்களிடம் தெரிவிக்கின்றனர்.மிகக்குறுகிய நாட்களுக்குள் மாவட்டத்தில் உள்ள அத்தனை பள்ளிகளுக்குள் சுற்றறிக்கை அல்லது போன் மூலம் தகவல் தெரிவிக்க இயலாது. எனவே, ஒருசில பள்ளி மாணவர்களைக் கொண்டு போட்டிகள் நடத்தி, அதிலிருந்து தேர்வு செய்து சிறப்புப் பயிற்சி அளிக்கின்றனர். திறமையான, தகுதியான அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த தடகள வீரர், வீராங்கனைகளுக்கு போட்டிகள் குறித்து தெரியாததால், அருமையான வாய்ப்பை இழக்கின்றனர்.

பள்ளிக் கல்வித்துறை சார்பில் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் அலுவலகம் மூலம் குறுவட்ட, மாவட்ட, மண்டல அளவிலான 14, 17 மற்றும் 19 வயதுக்குட்பட்டோருக்கான தடகளப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. உலகத் திறனாய்வு தடகளப் போட்டிகளை நடத்துவதற்கான நிதியை தனியாக அனுப்பினால், பள்ளிக் கல்வித்துறை மூலமே இப்போட்டிகளை நடத்தி திறமையான மாணவர்களை தேர்வு செய்ய முடியும். அரசு இதுகுறித்து பரிசீலனை செய்ய வேண்டும்.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு