Skip to main content

'உயிரியல்' ஆசிரியர்களை சோதிக்கும் 'கவுன்சிலிங்

'உயிரியல்' ஆசிரியர்களை சோதிக்கும் 'கவுன்சிலிங்': 19 ஆண்டுகளாக தொடருது குழப்பம்

அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 'உயிரியல்' பாடத்திற்கு ஆசிரியர் பணியிடங்கள் ஒதுக்குவதில், கடந்த 19 ஆண்டுகளாக நீடிக்கும் குழப்பத்திற்கு, இந்தாண்டு நடக்கும் கலந்தாய்வில் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என
ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.

தமிழகத்தில் 3,000 மேல்நிலை பள்ளிகள் உள்ளன. 1995ம் ஆண்டுக்குமுன் ஒவ்வொரு பள்ளிகளிலும், தாவரவியல் மற்றும் விலங்கியலுக்கு என தனித்தனி ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டனர். ஆனால், 1995க்கு பின், தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலைப் பள்ளிகளில், இப்பணியிடத்தை 'உயிரியல்' என மாற்றி, தாவரவியல் அல்லது விலங்கியல் ஆசிரியர்கள் யாராவது ஒருவர் மட்டுமே பணிநியமனம் செய்யப்பட்டனர். இதனால், ஒவ்வொரு ஆண்டும் மாறுதல் 'கவுன்சிலிங்'கின் போதும், இப்பாடப் பிரிவு ஆசிரியர்கள் பேராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் எதிரொலியாக, கடந்தாண்டு இப்பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என, கல்வி அதிகாரிகள் உறுதி அளித்தனர். இந்தாண்டு வெளியிடப்பட்ட 'கவுன்சிலிங்' அறிவிப்பில், 'பொதுமாறுதல் கோரும் ஆசிரியர், உயிரியியல் பாட ஆசிரியர் என்றால், 'உயிரியல்' என்றும் ஆசிரியரின் முதன்மை பாடம் 'தாவரவியலா' அல்லது 'விலங்கியலா' என்பதையும் இணையதள விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும்' என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால், விண்ணப்பப் பதிவின்போது அந்த வசதி இணையதளத்தில் இல்லாததால் ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால், இந்தாண்டும் 'கவுன்சிலிங்' போது குழப்பம் நீடிக்கும் வாய்ப்பு உள்ளதாக ஆசிரியர்கள் கவலையில் உள்ளனர்.

தமிழ்நாடு மேல்நிலை பள்ளி முதுகலை ஆசிரியர் கழக மாநில அமைப்பு செயலாளர் பிரபாகரன், மாவட்டத் தலைவர் சரவணமுருகன் கூறியதாவது: இப்பிரச்னை 1995 முதல் 2,000 பள்ளிகளில் உள்ளது. மதுரை மாவட்டத்தில் 40 பள்ளிகளில் 'உயிரியல்' பணியிடம் எனவும்; 19 பள்ளிகளில் 'தாவரவியல்' அல்லது 'விலங்கியல்' பணியிடங்கள் என்றும் உள்ளன. இதனால், உயிரியல் பாடத்தில் காலிப்பணியிடம் ஏற்படும் போது அதில் தாவரவியல் ஆசிரியருக்கு மாறுதல் பெற்றால், அது தாவரவியல் பணியிடமாகவே காண்பிக்கப்பட்டு விலங்கியல் ஆசிரியர் பெற முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. இதை சரிசெய்ய, தாவரவியல் அல்லது விலங்கியல் ஆசிரியர் மாறுதல் பெறும்போது உயிரியியல் மற்றும் அவர்களின் முதன்மை பாடத்தில் ஏற்படும் காலிப்பணியிடமும் காண்பிக்க கல்வி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு கூறினர்.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு