Skip to main content

மாவட்ட மாறுதல் ஆன்லைன் மூலம் நடத்த திட்டம்

தொடக்கக்கல்வித்துறையில் இடைநிலை / பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாவட்ட மாறுதல் ஆன்லைன் மூலம் நடத்த திட்டம்

2014-15ம் கல்வியாண்டிற்கான பொது மாறுதல் கலந்தாய்வில் தொடக்கக்கல்வித்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள அரசு / நகராட்சி பள்ளிகளில் பணிபுரிந்துவரும் ஆசிரியர்களுக்கான மாறுதல் கலந்தாய்வு நடைபெற்று
வருகிறது. ஆசிரியர்களுக்கான மாறுதல் கலந்தாய்வில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாவட்ட கலந்தாய்வு ஆன்லைன் மூலம் நடத்துவதற்கான ஆயுத்த பணிகள் தொடக்கக் கல்வி இயக்குனரகத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையடுத்து ஆன்லைன் கலந்தாய்விற்கு நடத்த ஏதுவாக புதிய விண்ணப்பம் உதவித் தொடக்கக் கல்வி அலுவலகம் மூலம் விரைவில் வழங்கப்படவுள்ளதாக தெரிகிறது. இதையடுத்து ஆசிரியர்கள் தங்களின் சொந்த மாவட்டத்தில் மாறுதல் கிடைக்கவில்லையென்றாலும் அருகிலுள்ள வேறு மாவட்டத்திற்கு மாறுதல் பெற வாய்ப்புள்ளது.
தகவல் : திரு.இராபர்ட், பொதுச் செயலாளர்

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா