Skip to main content

மாவட்ட மாறுதல் ஆன்லைன் மூலம் நடத்த திட்டம்

தொடக்கக்கல்வித்துறையில் இடைநிலை / பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாவட்ட மாறுதல் ஆன்லைன் மூலம் நடத்த திட்டம்

2014-15ம் கல்வியாண்டிற்கான பொது மாறுதல் கலந்தாய்வில் தொடக்கக்கல்வித்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள அரசு / நகராட்சி பள்ளிகளில் பணிபுரிந்துவரும் ஆசிரியர்களுக்கான மாறுதல் கலந்தாய்வு நடைபெற்று
வருகிறது. ஆசிரியர்களுக்கான மாறுதல் கலந்தாய்வில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாவட்ட கலந்தாய்வு ஆன்லைன் மூலம் நடத்துவதற்கான ஆயுத்த பணிகள் தொடக்கக் கல்வி இயக்குனரகத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையடுத்து ஆன்லைன் கலந்தாய்விற்கு நடத்த ஏதுவாக புதிய விண்ணப்பம் உதவித் தொடக்கக் கல்வி அலுவலகம் மூலம் விரைவில் வழங்கப்படவுள்ளதாக தெரிகிறது. இதையடுத்து ஆசிரியர்கள் தங்களின் சொந்த மாவட்டத்தில் மாறுதல் கிடைக்கவில்லையென்றாலும் அருகிலுள்ள வேறு மாவட்டத்திற்கு மாறுதல் பெற வாய்ப்புள்ளது.
தகவல் : திரு.இராபர்ட், பொதுச் செயலாளர்

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்