சிறப்பு டி.இ.டி., (ஆசிரியர் தகுதி தேர்வு) தேர்வில், தேர்ச்சி பெற்றவர்களுக்கு, ஜூலை, 1, 2ம் தேதிகளில், நான்கு மண்டலங்களில், சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது. மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு டி.இ.டி., தேர்வு (இரண்டாம் தாள்), கடந்த, மே, 21ம் தேதி நடந்தது. இதில், 4,500 பேர் பங்கேற்றனர். 933 பேர்,
தேர்ச்சி பெற்றனர். இவர்களுக்கு, வரும், ஜூலை, 1, 2ம் தேதிகளில், மதுரை, திருச்சி, சேலம், விழுப்புரம் ஆகிய நான்கு மண்டலங்களில், குறிப்பிட்ட மையங்களில், சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது. சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்க முடியாத மாற்றுத்திறனாளிகள், வேறு நபரை, சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அனுப்பலாம் என, டி.ஆர்.பி., தெரிவித்துள்ளது.
கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...