Skip to main content

மதிப்பெண் சான்றிதழ் பெறாத தனித்தேர்வர்களுக்கு கடைசி வாய்ப்பு

எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வை 2012-ம் ஆண்டில் தனித்தேர்வர்களாக எழுதியவர்கள் தங்களின் மதிப்பெண் சான்றிதழ்களை பெறுவதற்கு கடைசிவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அரசுத் தேர்வுகள் துறையின் திருச்சி மண்டலத் துணை இயக்குநர்
கி. சுபத்ரா புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

2012, மார்ச், ஏப்ரல் மாதங்களில் எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வை தனித்தேர்வர்களாக எழுதியவர்கள் தங்களுக்குரிய சான்றிதழ்களை நேரில் பெறாமலும், அஞ்சல் மூலம் அனுப்பி பட்டுவாடா ஆகாமலும், அசல் மதிப்பெண்கள் அரசுத் தேர்வுகள் மண்டலத் துணை இயக்குநர் அலுவலகத்தில் திரும்பப் பெறப்பட்டுள்ளது.

மதிப்பெண் சான்றிதழ்கள் விநியோகிக்கப்பட்ட நாளிலிருந்து 2 ஆண்டுக்குப் பின்னர் அழிக்கப்படலாம் என்றுவிதி இருப்பதால், இதுவே அவர்களுக்கு அளிக்கப்படும் கடைசிவாய்ப்பாகும்.

எனவே இதுவரை மதிப்பெண் சான்றிதழ் பெறாத தனிதேர்வர்கள் வெள்ளைத்தாளில் மதிப்பெண் சான்றிதழ் கோரும் விவரத்தை குறிப்பிட்டு, தேர்வெழுதிய பருவம், பிறந்த தேதி, தேர்வெழுதிய பாடம் மற்றும் தேர்வு மையத்தின் மையர் ஆகிய விவரங்களைக் குறிப்பிட்டு, ரூ. 40-க்கான அஞ்சல்வில்லை ஒட்டப்பட்ட சுயமுகவரியிட்ட எழுதிய உறை ஒன்றை இணைத்து, மண்டலத் துணை இயக்குநர், அரசுத் தேர்வுகள் மண்டலத் துணை இயக்குநர் அலுவலகம், பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், திருச்சி -1 என்ற முகவரிக்கு ஜூலை 12-ம் தேதிக்குள் அனுப்பி பெற்றுக் கொள்ளலாம்.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு