Skip to main content

ஆசிரியர்களின் திறனையும் ஆய்வு செய்து பள்ளிகளுக்கு 'கிரேடு' வழங்க திட்டம்

படைப்பாற்றல் மற்றும் செயல்வழிக் கல்வி வகுப்புகளில், அரசு பள்ளி குழந்தைகளை மட்டுமின்றி, ஆசிரியர்களின் திறனையும் ஆய்வு செய்து, பள்ளிகளுக்கு 'கிரேடு' வழங்கும் முறையை செயல்படுத்த, திருப்பூர் மாவட்ட
கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. அரசு துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளுக்கு கல்விச் செயல்பாடுகள், படைப்பாற்றல் கல்வி, கல்வி இணைச் செயல்பாடுகள், எளிய செயல்வழிக் கற்றல், எளிய படைப்பாற்றல் கல்வி உள்ளிட்ட கல்வி கற்பிக்கும் முறைகளை, அனைவருக்கும் கல்வி இயக்கத்தினர் ஆய்வு செய்கின்றனர்.

இதில், தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு என்னும் அடிப்படையில், ஏ,பி,சி,டி, என்ற கிரேடுகளை கல்வித்துறை மூலம், அரசு பள்ளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.நடப்பு கல்வியாண்டில், பள்ளிகளில் அனைத்து வகுப்புகளுக்கும் சேர்த்து, இக்கல்வி முறைகளை ஆய்வு செய்வதை காட்டிலும், வகுப்பு வாரியாகவும், பாட ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உட்பட அனைவரிடத்தும், படைப்பாற்றல் மற்றும் செயல்வழிக் கல்வி முறைகள் குறித்து ஆய்வு நடத்தி, கிரேடு வழங்க திருப்பூர் மாவட்ட கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:

மாணவர்களின் கற்பனைத்திறன்களை வெளிப்படுத்தவும், பாடங்கள் எளிதில் மனதில் பதிய வேண்டிய செயல்வழி மற்றும் படைப்பாற்றல் கல்வி வகுப்புகள் முறையை பின்பற்றப்படுகிறது. இம்முறை முழுமையாக பயனுள்ளதாக இருக்க, ஆசிரியர்களும் இக்கல்வி முறைகள் குறித்து அறிந்திருக்கவும், பின்பற்றவும் வேண்டும். ஆசிரியர்களுக்கு பாடவாரியாக பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதன் செயல்பாடுகள் குறித்து பள்ளிகளில் ஆய்வு மேற்கொள்ளப்படும்.இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்