Skip to main content

கடலோரக் காவல் படையில் பதவி

இந்தியாவின் கடலோர எல்லைகளை சிறந்த முறையில் பாதுகாப்பதற்கான துணை ராணுவப் படையாக இந்தியக் கடலோரக் காவல் படை விளங்குகிறது. இந்தப் படையில் யாந்திரிக் பிரிவில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வயது: இந்தியன் கோஸ்ட் கார்டின் யாந்திரிக் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 18 வயது முதல் 22 வயது உடையவராக இருக்க வேண்டும். அதாவது 01.02.1993க்கு பின்னரும் 31.01.1997க்கு முன்னரும் பிறந்தவராக இருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பிற்கு நிகரான படிப்பை முடித்திருக்க வேண்டும். இதன் பின்னர் மெக்கானிக்கல், எலக்ட்ரிகல், எலக்ட்ரானிக்ஸ் ஆகிய ஏதாவது ஒரு இன்ஜினியரிங் பிரிவில் குறைந்த பட்சம் 60 சதவீத மதிப்பெண்களுடன் டிப்ளமோ படிப்பை முடித்திருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., ஆகிய பிரிவைச் சார்ந்தவர்களுக்கு உச்ச பட்ச வயதில் சலுகை உள்ளது.
உடல் தகுதி: உயரம் குறைந்த பட்சம் 157 செ.மி.,யும் இதற்கு நிகரான எடையும் இருக்க வேண்டும். மார்பு விரிவடையும் தன்மை குறைந்த பட்சம் 5 செ.மீ., இருக்க வேண்டும்.
தேர்ச்சி முறை: எழுத்துத் தேர்வு, பிசிக்கல் எபீசியன்சி டெஸ்ட் மற்றும் மருத்துவப் பரிசோதனை ஆகிய முறைகளில் தேர்ச்சி இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பதவிக்கான எழுத்துத் தேர்வு தமிழகத்தில் சென்னையில் கீழ்க்கண்ட முகவரியில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Indian Coast Guard Store Depot, CG Complex, Near Kalmandapam Police Station, GM Pettai Road, Royapuram, Chennai-13.
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமுடைய மேற்கண்ட தகுதிகள் பெற்ற விண்ணப்பதாரர்கள் ஆன்-லைன் முறையில் தங்கள் விண்ணப்பங்களை பதிவு செய்ய வேண்டும். 
விண்ணப்பிக்க இறுதி நாள்: 18.06.2014

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு