Skip to main content

கடலோரக் காவல் படையில் பதவி

இந்தியாவின் கடலோர எல்லைகளை சிறந்த முறையில் பாதுகாப்பதற்கான துணை ராணுவப் படையாக இந்தியக் கடலோரக் காவல் படை விளங்குகிறது. இந்தப் படையில் யாந்திரிக் பிரிவில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வயது: இந்தியன் கோஸ்ட் கார்டின் யாந்திரிக் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 18 வயது முதல் 22 வயது உடையவராக இருக்க வேண்டும். அதாவது 01.02.1993க்கு பின்னரும் 31.01.1997க்கு முன்னரும் பிறந்தவராக இருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பிற்கு நிகரான படிப்பை முடித்திருக்க வேண்டும். இதன் பின்னர் மெக்கானிக்கல், எலக்ட்ரிகல், எலக்ட்ரானிக்ஸ் ஆகிய ஏதாவது ஒரு இன்ஜினியரிங் பிரிவில் குறைந்த பட்சம் 60 சதவீத மதிப்பெண்களுடன் டிப்ளமோ படிப்பை முடித்திருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., ஆகிய பிரிவைச் சார்ந்தவர்களுக்கு உச்ச பட்ச வயதில் சலுகை உள்ளது.
உடல் தகுதி: உயரம் குறைந்த பட்சம் 157 செ.மி.,யும் இதற்கு நிகரான எடையும் இருக்க வேண்டும். மார்பு விரிவடையும் தன்மை குறைந்த பட்சம் 5 செ.மீ., இருக்க வேண்டும்.
தேர்ச்சி முறை: எழுத்துத் தேர்வு, பிசிக்கல் எபீசியன்சி டெஸ்ட் மற்றும் மருத்துவப் பரிசோதனை ஆகிய முறைகளில் தேர்ச்சி இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பதவிக்கான எழுத்துத் தேர்வு தமிழகத்தில் சென்னையில் கீழ்க்கண்ட முகவரியில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Indian Coast Guard Store Depot, CG Complex, Near Kalmandapam Police Station, GM Pettai Road, Royapuram, Chennai-13.
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமுடைய மேற்கண்ட தகுதிகள் பெற்ற விண்ணப்பதாரர்கள் ஆன்-லைன் முறையில் தங்கள் விண்ணப்பங்களை பதிவு செய்ய வேண்டும். 
விண்ணப்பிக்க இறுதி நாள்: 18.06.2014

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

முன்னுதாரணமாக விளங்கும் வடமணப்பாக்கம் அரசு தொடக்கப் பள்ளி

எண்ம முறையில் பாடம் கற்றல், குழந்தைகள் நூல்கள் வாசித்தல், கணினிபயிற்சி பெறுதல், அறிவியல் ஆய்வகம் என பல சிறப்பு அம்சங்களுடன் சுகாதாரம், ஒழுக்கம் ஆகியவற்றுடன் சேர்ந்து கல்வி கற்பிக்கப்படுகிறது.