தமிழகத்தில் அனைத்து பள்ளி கட்டிடங்களிலும், அரசு அலுவலகங்களிலும் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஜூன் 30ம் தேதிக்குள் அமைக்கப்பட வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும் இது தொடர்பான அறிவுரைகளும்
தொடக்க கல்வி அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மழைநீர் சேகரிப்பு தொடர்பாக சென்னையில் நடந்த கூட்டத்தில் பள்ளிகளில் மழைநீர் சேகரிப்பு அமைக்கப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்ய தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய பயிற்சியாளர்கள் பள்ளிதோறும் சென்று ஆய்வு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கு ஆய்வுக்கு அதிகாரிகள் வரும்போது தலைமை ஆசிரியர்கள் உரிய ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...