Skip to main content

டெங்கு காய்ச்சலுக்கும் மருத்துவக் காப்பீடு: உயர்நீதிமன்றம்

மருத்துவ காப்பீடு பட்டியலில் இல்லாத டெங்கு காய்ச்சலுக்கான சிகிச்சை செலவை திரும்ப வழங்க அரசுக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.

திருநெல்வேலியைச் சேர்ந்த அரசுப்பள்ளி இடைநிலை ஆசிரியை என்.சுசீலா தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு இவ்வாறு
உத்தரவிட்டார்.

மனுவில், அரசின் மருத்துவகாப்பீடு திட்டத்தில் எனது குடும்ப உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். எனது மகள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு நெல்லையில் உள்ள ரோஸ்மேரி மருத்துவமனையில் 2012 ஜன.17 முதல் மார்ச் 7 வரை சிகிச்சை பெற்றாள். சிகிச்சை கட்டணமாக ரூ. 4லட்சத்து 16 ஆயிரத்து 958 செலுத்தினேன். அரசின் புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டதின் கீழ் இந்த தொகையை திரும்ப வழங்கக்கோரி விண்ணப்பித்தேன். காப்பீடு திட்டத்தில் உள்ளநோய்கள் பட்டியலில் டெங்கு காய்ச்சல் இல்லை எனக் கூறி அரசு நிராகரித்தது என குறிப்பிடப்பட்டிருந்தது.

இம்மனுவுக்கு பதிலளித்த அரசு வழக்குரைஞர் காப்பீடு திட்டம் தொடர்பான புகார்கள் குறித்து மாவட்ட ஆட்சியர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழு விசாரித்து முடிவெடுக்கும் என தெரிவித்தார்.

மனுவை விசாரித்த நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு பிறப்பித்த உத்தரவு: இந்த வழக்கில் பட்டியலில் இல்லாத நோய்க்கான செல்வுத் தொகையை மனுதாரர் கோரியுள்ளார். ஒருவர் தனக்கு எந்த வகையான நோய் வரும் என்பதை முன்கூட்டியே யூகித்து அறிய முடியாது. அதே போன்று பட்டியலில் இல்லாத பிற நோய்கள் வராது என அரசும் உறுதியாக கூற இயலாது. ஒரு திட்டத்தை செயல்படுத்தும்போது கூடுமானவரையில் சம்பந்தப்பட்டவருக்கு போதிய பலன் கிடைக்கும் வகையில் அதிகாரிகள் செயல்பட வேண்டியது அவசியம். அதைவிடுத்து விதிகளை மட்டும் கையிலெடுத்து பலன் வழங்க மறுத்தால் அந்த தடையை நீக்க நீதிமன்றம் தயங்காது. எனவே டெங்கு காய்ச்சல், காப்பீடு திட்ட நோய்கள் பட்டியலில் இல்லை எனக்கூறி பிறப்பிக்கப்பட்ட உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மனுதாரர் கோரும் தொகையை 8 வாரங்களில் திரும்ப வழங்க நெல்லை மாவட்ட ஆட்சியர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு