Skip to main content

கிராம நிர்வாக அலுவலர் காலியிடங்களில், காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களை நிரப்ப, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காத்திருப்பு பட்டியலில் உள்ளவர்களை நிரப்ப உத்தரவு.

தமிழகத்தில், 352, கிராம நிர்வாக அலுவலர் காலியிடங்களில், காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களை நிரப்ப, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்கள், 3,484க்கு, விண்ணப்பங்களை வரவேற்று, அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம், 2010, டிசம்பரில், அறிவிப்பு
வெளியிட்டது. 2011,பிப்ரவரியில், எழுத்துத் தேர்வு நடந்தது. அதன் அடிப்படையில், தேர்வுப் பட்டியலை, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டது. அதோடு, காத்திருப்போர் பட்டியலையும், வெளியிட்டது. காத்திருப்போர் பட்டியலில் இருக்கும் 24 பேர், நிரப்பப்படாத காலியிடங்களில், தங்களுக்கு பணிவழங்க கோரி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். மனுவை விசாரித்த, நீதிபதி நாகமுத்து பிறப்பித்த உத்தரவு: உரிய நேரத்தில், காலியிட விவரங்களை, டி.என்.பி.எஸ்.சி.,க்கு தெரிவித்திருந்தால், காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களை நிரப்பியிருப்பர். சிறப்பு நேர்வாக கருதி, அரசு அளிக்கும் காலியிடங்கள் விவரங்களின் அடிப்படையில், காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களை நிரப்புவதாக, டி.என்.பி.எஸ்.சி., தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஒரே ஒரு முறையாக, இந்த நடவடிக்கையை மேற்கொள்வதில் ஆட்சேபனையில்லை என, அரசு தரப்பிலும் தெரிவிக்கப்பட்டது. 2012,செப்., 15 முதல், 2013, ஜன., 2 வரையிலும், 352, காலியிடங்கள் ஏற்பட்டிருப்பதாக, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. எனவே, இந்த, 352, காலியிடங்களிலும், காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களை, நிரப்ப வேண்டும். இவ்வாறு, நீதிபதி நாகமுத்து உத்தரவிட்டுள்ளார்.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு