Skip to main content

கிராம நிர்வாக அலுவலர் காலியிடங்களில், காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களை நிரப்ப, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காத்திருப்பு பட்டியலில் உள்ளவர்களை நிரப்ப உத்தரவு.

தமிழகத்தில், 352, கிராம நிர்வாக அலுவலர் காலியிடங்களில், காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களை நிரப்ப, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்கள், 3,484க்கு, விண்ணப்பங்களை வரவேற்று, அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம், 2010, டிசம்பரில், அறிவிப்பு
வெளியிட்டது. 2011,பிப்ரவரியில், எழுத்துத் தேர்வு நடந்தது. அதன் அடிப்படையில், தேர்வுப் பட்டியலை, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டது. அதோடு, காத்திருப்போர் பட்டியலையும், வெளியிட்டது. காத்திருப்போர் பட்டியலில் இருக்கும் 24 பேர், நிரப்பப்படாத காலியிடங்களில், தங்களுக்கு பணிவழங்க கோரி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். மனுவை விசாரித்த, நீதிபதி நாகமுத்து பிறப்பித்த உத்தரவு: உரிய நேரத்தில், காலியிட விவரங்களை, டி.என்.பி.எஸ்.சி.,க்கு தெரிவித்திருந்தால், காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களை நிரப்பியிருப்பர். சிறப்பு நேர்வாக கருதி, அரசு அளிக்கும் காலியிடங்கள் விவரங்களின் அடிப்படையில், காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களை நிரப்புவதாக, டி.என்.பி.எஸ்.சி., தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஒரே ஒரு முறையாக, இந்த நடவடிக்கையை மேற்கொள்வதில் ஆட்சேபனையில்லை என, அரசு தரப்பிலும் தெரிவிக்கப்பட்டது. 2012,செப்., 15 முதல், 2013, ஜன., 2 வரையிலும், 352, காலியிடங்கள் ஏற்பட்டிருப்பதாக, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. எனவே, இந்த, 352, காலியிடங்களிலும், காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களை, நிரப்ப வேண்டும். இவ்வாறு, நீதிபதி நாகமுத்து உத்தரவிட்டுள்ளார்.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா