Skip to main content

தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கு மாறுதல் கலந்தாய்வு இன்று துவக்கம்

திருவாரூர் மாவட்ட தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு, இன்று துவங்குகிறது.
மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் மாந்தரையன் வெளியிட்ட அறிக்கை:
திருவாரூர் மாவட்ட தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல்
மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு முகாம் இன்று (17ம் தேதி) துவங்கி வரும், 28ம் தேதி வரை நடைபெறுகிறது. மாவட்ட தொடக்க கல்வித் துறைக்கு உட்பட்ட ஊராட்சி ஒன்றியம் மற்றும் நகராட்சி பகுதிகளில் உள்ள அரசு தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு, திருவாரூர் கந்தப்ப மட தெருவில் உள்ள ஆர்.சி. பாத்திமா உயர்நிலைப்பள்ளியில் நடைபெறுகிறது. இன்று, (17ம் தேதி) காலை நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கான பொது மாறுதலும், பிற்பகல் பதவி உயர்வு குறித்த கலந்தாய்வும் நடைபெறுகிறது. நாளை (18ம் தேதி) காலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நிரவல் கலந்தாய்வும், பிற்பகல் ஒன்றியத்திற்குள் மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வும் நடைபெறுகிறது. வரும், 19ம் தேதி பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாவட்டத்திற்குள், ஒன்றியம் விட்டு ஒன்றியம் மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வும், 21ம் தேதி மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வும் நடைபெறுகிறது.
வரும், 23ம் தேதி காலை தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கான மாறுதல் கலந்தாய்வும், பிற்பகல் பதவி உயர்வு கலந்தாய்வும் நடைபெறுகிறது. 24ம் தேதி இடைநிலை ஆசிரியர்களுக்கான பணி நிரவல் கலந்தாய்வு, 25ம் தேதி ஒன்றியத்திற்குள் மாறுதல் கலந்தாய்வு, 26ம் தேதி மாவட்டத்திற்குள் ஒன்றியம் விட்டு ஒன்றியம் மாறுதல் கலந்தாய்வு, 28ம் தேதி மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு நடைபெறுகிறது.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு