Skip to main content

வங்கி கடன் மூலம் வீடு வாங்குகிறீர்களா? உங்களுக்கு சலுகை காத்திருக்கிறது

வங்கி கடன் மூலம் முதல் முறையாக வீடு வாங்குபவர்களுக்கு வட்டி சலுகை வழங்க மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.பிரதமர் நரேந்திர மோடி அரசின் முதலாவது பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் அருண்ஜேட்லி வரும் 10ந் தேதி தாக்கல்
செய்கிறார். பட்ஜெட் தயாரிப்பு தொடர்பாக அவர் பல்வேறு தரப்பினரையும் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.

பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரி உச்சவரம்பு உயர்த்தப்படுமா, வரிவிதிப்பால் மாற்றம் வருமா, புதிய அறிவிப்புகள் வெளியாகுமா என்ற எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளது. இந்நிலையில் வங்கிக்கடன் மூலம் முதல் முறையாக வீடு வாங்கியவர்களுக்கு மத்திய அரசு பட்ஜெட்டில் வட்டி சலுகை வழங்க திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி முதல் முறையாக வீடு வாங்குபவர்கள் வங்கியில் நேரடியாக செலுத்தும் வீடு வாங்க கூடிய நபரின் வருமானத்தின் அடிப்படையில் இந்த சலுகை வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு