Skip to main content

8 ஆயிரம் தலைமை ஆசிரியர்களுக்கு பயிற்சி

பள்ளி மற்றும் கல்வித்தர மேற்பாட்டுக்காக 8 ஆயிரம் பள்ளித் தலைமை ஆசிரியர்க்கு பயிற்சி அளிக்க மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககம் முடிவு செய்துள்ளது.அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் தரத்தை உயர்த்தவும், கல்வித் தரத்தை உயர்த்தவும் கூடிய அகமேற்பார்வை
அவசியம். இது குறித்து அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும் தெரிந்து வைத்துக் கொள்வதும் அவசியம். அதனால் மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககம் 2 நாள் பயிற்சியை அளிக்க முடிவு செய்துள்ளது. முதற்கட்டமாக அனைத்து அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு இந்த பயிற்சி அளிக்கப்படுகிறது. மாநில அளவில் கருத்தாளர் பயிற்சி 2 கட்டமாக அளிக்கப்படும்.

இதையடுத்து மாவட்ட அளவிலும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. மாநில அளவில் பயிற்சி பெற்றவர்கள் மாவட்ட அளவில் பயிற்சி அளிப்பாளர்கள். இந்த பயிற்சி ஜூலை 7ம் தேதி முதல் 19ம் தேதி வரை நடக்கிறது. ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தலா 2 நாள் வீதம் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில், 8 ஆயிரத்து 629 தலைமை ஆசிரியர்கள் 38 மையங்கள் மூலம் பயிற்சி பெறுகின்றனர். மாவட்ட ஆசிரியர் பயிற்சி மைய முதல்வர்கள், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அதிகாரிகள் இந்த பயிற்சியை நடத்துவார்கள்.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு