Skip to main content

மழைநீர் சேகரிப்பு ஓவியப்போட்டி: ஜூலை 7ல் சென்னையில் நடக்கிறது

உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு, மாநில அளவிலான மழைநீர் சேகரிப்பு குறித்த கண்காட்சி மற்றும் ஓவியப்போட்டி, சென்னையில் ஜூலை 7ல் நடக்கிறது.

'தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும், ஜூன் 30க்குள், மழைநீர் சேகரிப்பு அமைப்பு ஏற்படுத்த வேண்டும்' என, பள்ளிகல்வித் துறை உத்தரவிட்டது. அதற்கான பணிகள் நடக்கின்றன. மழைநீர் சேகரிப்பை
வலியுறுத்தி, பள்ளி மாணவர்களின் ஊர்வலம், மாவட்ட அளவிலான ஓவியப்போட்டி நடத்தப்பட்டது. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான, மாநில அளவிலான மழைநீர் சேகரிப்பு குறித்த கண்காட்சி மற்றும் ஓவியப்போட்டி, ஜூலை 7ல், சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை, சுங்குவார்சத்திரம் அருகில் உள்ள, மகரிஷி பன்னாட்டு உண்டு உறைவிடப்பள்ளியில் நடக்கிறது.

கல்வித்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: பள்ளிக்கல்வித் துறை சார்பில், இப்போட்டிகள் நடக்கின்றன. 6 - 8ம் வகுப்பு; 9 - 10ம் வகுப்பு; பிளஸ் 1, பிளஸ் 2 என, மூன்று பிரிவுகளில், மாவட்டத்தில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்த, இரு மாணவர்கள் வீதம் ஆறு பேர் என, 32 மாவட்டங்களில் இருந்து, 192 பேர் கலந்து கொள்கின்றனர். மூன்று பிரிவுகளிலும், முதல் மூன்று இடங்களைப் பெறுவோருக்கு, 22 ஆயிரம் ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்படும். வரும், ஜூலை 6ம் தேதி மாலை, 5:00 மணிக்கே, மாணவர்கள் தங்களது பெயர்களை, அங்கே முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். அவர்களுடன் இரு ஆசிரியர்களும் செல்ல வேண்டும். மாவட்டங்களில் இதற்கான ஏற்பாடுகளை முதன்மைக்கல்வி அதிகாரிகள் செய்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்