Skip to main content

5-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு "ஹெட் ஸ்டார்ட்' ஒலி வழி ஆங்கில பயிற்சி

5-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு "ஹெட் ஸ்டார்ட்' ஒலி வழி ஆங்கில பயிற்சி

ஒரு லட்சம் பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில பயிற்சியளிக்க வித்யாரம்பம் அறக்கட்டளை திட்டமிட்டுள்ளதாக அதன் நிறுவனர் ரெங்கநாதன் தெரிவித்தார்.

வித்யாரம்பம் அறக்கட்டளை சார்பில் ஆங்கிலப் பயிற்சி பெற்ற குழந்தைகள் மற்றும் ஆசிரியர்களுடைய செயல்பாடுகளுக்கான பாராட்டு விழா
சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

விழாவில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன் பேசியது:

தற்போது கல்வி என்பது வியாபாரமாக மாறிவிட்ட நிலையில், பொறுப்புணர்ந்து கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள் குறைந்துவிட்டனர். உலக அளவில் மாணவர்கள் சாதிக்க ஆங்கில அறிவு அத்தியாவசியமானதாகிவிட்டது. அதற்காக தாய்மொழியை மறந்து ஆங்கிலத்தை கற்க வேண்டும் என்பதல்ல. பிறமொழி அறிவும் அவசியம் என்றார்.

வித்யாரம்பம் அறக்கட்டளையின் நிறுவனர் ரெங்கநாதன் கூறியது:

அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு எளிய முறையில் ஆங்கில பயிற்சி வகுப்புகளை இந்த அறக்கட்டளை நடத்தி வருகிறது. தற்போது "ஹெட் ஸ்டார்ட்' என்ற புதிய திட்டத்தின் மூலம் ஒலி வழி ஆங்கில பயிற்சி வகுப்புகளை 5-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளோம்.

இந்த அறக்கட்டளையில் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள், 10 மாவட்டங்களில் ஒரு லட்சம் மாணவர்களுக்கு ஆங்கில பயிற்சியை வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார்.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா