Skip to main content

5-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு "ஹெட் ஸ்டார்ட்' ஒலி வழி ஆங்கில பயிற்சி

5-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு "ஹெட் ஸ்டார்ட்' ஒலி வழி ஆங்கில பயிற்சி

ஒரு லட்சம் பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில பயிற்சியளிக்க வித்யாரம்பம் அறக்கட்டளை திட்டமிட்டுள்ளதாக அதன் நிறுவனர் ரெங்கநாதன் தெரிவித்தார்.

வித்யாரம்பம் அறக்கட்டளை சார்பில் ஆங்கிலப் பயிற்சி பெற்ற குழந்தைகள் மற்றும் ஆசிரியர்களுடைய செயல்பாடுகளுக்கான பாராட்டு விழா
சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

விழாவில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன் பேசியது:

தற்போது கல்வி என்பது வியாபாரமாக மாறிவிட்ட நிலையில், பொறுப்புணர்ந்து கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள் குறைந்துவிட்டனர். உலக அளவில் மாணவர்கள் சாதிக்க ஆங்கில அறிவு அத்தியாவசியமானதாகிவிட்டது. அதற்காக தாய்மொழியை மறந்து ஆங்கிலத்தை கற்க வேண்டும் என்பதல்ல. பிறமொழி அறிவும் அவசியம் என்றார்.

வித்யாரம்பம் அறக்கட்டளையின் நிறுவனர் ரெங்கநாதன் கூறியது:

அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு எளிய முறையில் ஆங்கில பயிற்சி வகுப்புகளை இந்த அறக்கட்டளை நடத்தி வருகிறது. தற்போது "ஹெட் ஸ்டார்ட்' என்ற புதிய திட்டத்தின் மூலம் ஒலி வழி ஆங்கில பயிற்சி வகுப்புகளை 5-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளோம்.

இந்த அறக்கட்டளையில் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள், 10 மாவட்டங்களில் ஒரு லட்சம் மாணவர்களுக்கு ஆங்கில பயிற்சியை வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார்.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு