Skip to main content

ஆசிரியர் பட்டயப் படிப்பு: விண்ணப்ப விற்பனை 25ம் தேதி வரை நீட்டிப்பு.

புதுச்சேரி:ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனத்தில் டி.இ.இ. சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் விற்பனை வரும் 25ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் வல்லவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:


புதுச்சேரி அரசு கல்வித்துறையில் பள்ளிக்கல்வி இயக்ககத்தின் கீழ் இயங்கி வரும் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் 2014-15ம் கல்வியாண்டிற்கான இரண்டாண்டுகள் ஆசிரியர் பட்டயப் படிப்புச் (டி.இ.இ.) சேர்க்கைக்கு புதுச்சேரி யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த மாணவ, மாணவியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கடந்த மே மாதம் 21ம் தேதி முதல் 13.6.2014ம் தேதி வரை பெறப்பட்டு வந்தது.


பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களைத் தேவையான நகல் சான்றிதழ்களுடன் லாஸ்பேட்டை, மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனத்தில் சமப்பிப்பதற்கான கால அவகாசம் வரும் 25ம் தேதி மாலை 5.30 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இப்பட்டயப்படிப்பில் சேர விரும்புவோர் மேல்நிலைப்பள்ளித் தேர்வில் அல்லது அதற்கு சமமான தேர்வில் குறைந்தபட்சம் 50 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றிருத்தல்வேண்டும்.எனினும், அட்டவணை இனத்தவர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் குறைந்த பட்சம் 45 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றிருத்தல்வேண்டும். சேர்க்கைக்கான அதிகபட்சமாக 29 வயது இருத்தல் வேண்டும்.


அட்டவணை இனத்தவருக்கு 5 ஆண்டுகளும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் சலுகை உண்டு. விண்ணப்பம்பெற 100 ரூபாயும், அட்டவணை இனத்தவருக்கு 50 ரூபாயும் செலுத்த வேண்டும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு