Skip to main content

ஆசிரியர் பட்டயப் படிப்பு: விண்ணப்ப விற்பனை 25ம் தேதி வரை நீட்டிப்பு.

புதுச்சேரி:ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனத்தில் டி.இ.இ. சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் விற்பனை வரும் 25ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் வல்லவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:


புதுச்சேரி அரசு கல்வித்துறையில் பள்ளிக்கல்வி இயக்ககத்தின் கீழ் இயங்கி வரும் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் 2014-15ம் கல்வியாண்டிற்கான இரண்டாண்டுகள் ஆசிரியர் பட்டயப் படிப்புச் (டி.இ.இ.) சேர்க்கைக்கு புதுச்சேரி யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த மாணவ, மாணவியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கடந்த மே மாதம் 21ம் தேதி முதல் 13.6.2014ம் தேதி வரை பெறப்பட்டு வந்தது.


பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களைத் தேவையான நகல் சான்றிதழ்களுடன் லாஸ்பேட்டை, மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனத்தில் சமப்பிப்பதற்கான கால அவகாசம் வரும் 25ம் தேதி மாலை 5.30 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இப்பட்டயப்படிப்பில் சேர விரும்புவோர் மேல்நிலைப்பள்ளித் தேர்வில் அல்லது அதற்கு சமமான தேர்வில் குறைந்தபட்சம் 50 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றிருத்தல்வேண்டும்.எனினும், அட்டவணை இனத்தவர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் குறைந்த பட்சம் 45 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றிருத்தல்வேண்டும். சேர்க்கைக்கான அதிகபட்சமாக 29 வயது இருத்தல் வேண்டும்.


அட்டவணை இனத்தவருக்கு 5 ஆண்டுகளும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் சலுகை உண்டு. விண்ணப்பம்பெற 100 ரூபாயும், அட்டவணை இனத்தவருக்கு 50 ரூபாயும் செலுத்த வேண்டும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா