Skip to main content

இன்று ஜூன்_20

நிகழ்வுகள்

1631 - பால்ட்டிமோர் என்ற ஐரிய ஊர் அல்ஜீரிய கடற்கொள்ளைக்காரர்களினால் முற்றுகையிடப்பட்டது.
1756 - கல்கத்தாவில் நவாப்புகளினால் பிரித்தானியப் படைவீரர்கள் சிறைப்பிடிக்கப்பட்டனர்.
1791 - பிரெஞ்சுப் புரட்சி: பிரான்சின் பதினாறாம் லூயி மன்னனும் அவனது குடும்பமும் வரெனெஸ் நகருக்குத் தப்பியோடினர்.
1837 - விக்டோரியா பிரித்தானியாவின் அரசியாக முடி சூடினார்.
1858 - இந்தியச் சிப்பாய்க் கிளர்ச்சி, 1857 முடிவுக்கு வந்தது.
1862 - ருமேனியாவின் பிரதமர் பார்பு கட்டார்ஜியூ படுகொலை செய்யப்பட்டார்.
1863 - மேற்கு வேர்ஜீனியா ஐக்கிய அமெரிக்காவின் 35வது மாநிலமாக சேர்க்கப்பட்டது.
1877 - அலெக்சாண்டர் கிரகாம் பெல் உலகின் முதலாவது வர்த்தக தொலைபேசிச் சேவையை கனடாவின் ஹமில்ட்டன் நகரில் ஆரம்பித்தார்.
1900 - பொக்சர் படைகள் பீக்கிங்கில் நூற்றுக்கணக்கான ஐரோப்பியர்களைக் கொன்றனர்.
1944 - இரண்டாம் உலகப் போர்: பிலிப்பீன் கடல் சமர் அமெரிக்கக் கடற்படையின் பெருவெற்றியில் முடிவடைந்தது.
1960 - மாலி, செனகல் ஆகிய நாடுகள் பிரான்சிடம் இருந்து விடுதலை அடைந்தன.
1978 - கிறீசில் 6.5 றிக்டர் அளவு நிலநடுக்கம் பதிவானது.
1990 - யூரேக்கா என்ற சிறுகோள் கண்டுபிடிக்கப்பட்டது.
1991 - ஜெர்மனியின் தலைநகரம் பொன் இலிருந்து பேர்லினுக்கு மீண்டும் மாற்ற பாராளுமன்றத்தில் முடிவு செய்யப்பட்டது.
2001 - பாகிஸ்தானின் அதிபராக பெர்வேஸ் முஷாரஃப் பதவியேற்றார்.
2003 - விக்கிமீடியா அமைப்பு உருவானது. 

இறப்புகள்

1971 - மகாகவி உருத்திரமூர்த்தி, ஈழத்துக் கவிஞர் (பி. 1927)
2005 - ஜாக் கில்பி, அமெரிக்க மின்னியல் பொறியாளர் (பி. 1923)
2006 - சுரதா, தமிழகக் கவிஞர் 

சிறப்பு நாள்

உலக அகதிகள் நாள்
ஆர்ஜெண்டீனா - கொடி நாள்

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்