Skip to main content

புதிய பஸ் பாஸ் வழங்கும் வரை பழைய பாஸ் செல்லும்

புதிய பஸ் பாஸ் வழங்கும் வரை பழைய பாஸ் செல்லும்: போக்குவரத்துக் கழகங்களுக்கு அரசு உத்தரவு
தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர் களுக்கு புதிய பஸ் பாஸ் வழங்கும் வரையில் பழைய பஸ் பாஸ் செல்லும் என்று அரசு போக்குவரத்து கழகங்களுக்கு தமிழக அரசு உத்தரவிடப்பட் டுள்ளது.
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து அரசு மற்றும் அரசு உதவி பெறும்
பள்ளிகள் ஜூன் 2-ம் தேதி திறக்கப்படவுள்ளன. இப்பள்ளிகளில் முதல் வகுப்பில் இருந்து பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் ‘ஸ்மார்ட் கார்டு’ வடிவில் பஸ் பாஸ் வழங்கப்பட்ட தால் சிறிது காலதாமதம் ஏற் பட்டது. இந்த ஆண்டு மாணவர்களுக்கு சிரமமின்றி இலவச பஸ் பாஸ் வழங்க போக்குவரத்து துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கான டெண்டர் தற்போது விடப்பட்டுள்ளது.
டெண்டர் இறுதி செய்யப்பட்டு விரைவில் இதற்கான பணிகள் தொடங்கப்படவுள்ளன. கடந்த ஆண்டு 25 லட்சம் பேருக்கு பாஸ் வழங்கப்பட்டன. இந்த ஆண்டு 27 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு பஸ் பாஸ் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தேவைப் பட்டால் இது மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஆண்டுதோறும் பஸ் பாஸ் வழங்க ஒன்றிரண்டு மாதங்கள் ஆகும் என்பதால் மாணவர்கள் காசு கொடுத்து பஸ்ஸில் செல்ல வேண்டியுள்ளது.
எனவே, மாணவர்களின் நலன்கருதி, புதிய பஸ் பாஸ் வழங்கும் வரையில் பழைய பஸ் பாஸை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று போக்கு வரத்து கழகங்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி ஆகஸ்ட் மாதம் வரையில் பழைய பஸ் பாஸ் செல்லும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக போக்குவரத் துத்துறை உயர் அதிகாரிகள் கூறுகையில், “பள்ளிகள் திறப்பதற்கு முன்பே பஸ் பாஸ் வழங்க நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
இருப்பினும், ஓரிரு வாரங்கள் காலதாமதம் ஏற்படலாம். எனவே, மாணவர்களின் நலன்கருதி வரும் ஆகஸ்ட் மாதம் வரையில் பழைய பஸ் பாஸை மாணவர்கள் பயன்படுத்தலாம், அதை அரசு போக்குவரத்து கழகங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது’’ என்றனர்.
பெற்றோர் கோரிக்கை
அரசு போக்குவரத்து கழகங்க ளுக்கு பிறப்பித்துள்ள உத்தரவு வெறும் பெயரளவில் இருக்கக் கூடாது. கடந்த ஆண்டிலும் புதிய பஸ் பாஸ் வழங்கும் வரை பழைய பஸ் பாஸ் பயன் படுத்தலாம், அல்லது பள்ளி சீருடையில் மாணவர்கள் வந்தால் பயணச்சீட்டு கேட்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டது. ஆனால், பல்வேறு இடங்களில் நடத்துநர்கள் இதை ஏற்றுக் கொள்ளவில்லை. எனவே, அரசு உத்தரவை அதிகாரபூர்வமாக போக்குவ ரத்து பணிமனைகளின் தகவல் பலகைகளில் ஒட்ட வேண்டுமென பெற்றோர் தரப்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு