Skip to main content

வேலை வாய்ப்பு பதிவு செய்து காத்திருப்போர் உதவி தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருப்போர் உதவி தொகைக்கு விண்ணப்பிக்கலாம் 

திருவண்ணாமலை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்து 5 ஆண்டு காத்திருப்பவர்கள் உதவிதொகை பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர்
ஞானசேகரன் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை கலெக்டர் ஞானசேகரன் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து தொடர்ந்து புதுப்பித்து வந்து 31.3.2014ம் தேதி வரை பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கு மேல் காத்திருக்கும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். மாற்று திறனாளிகள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 1 ஆண்டு முடிந்திருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வேலைவாய்ப்பு அலுவலத்தில் பதிவுசெய்து 5ஆண்டுகளுக்கு மேல் காத்திருக்கும் இளைஞர்கள் உதவிதொகை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 45 வயதுக்குட்பட்டவர்களாகவும், பிசி,எம்பிசி மற்றும் இதர வகுப்பினர் 40 வயதிற்குட்பட்டவர்களாகவும் ஆண்டு வருமானம் 50 ஆயிரத்திற்குள் இருக்க வேண்டும்.
பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு ரூ.100, தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.150, மேல்நிலைப்படிப்பு முடித்தவர்களுக்கு ரூ.200, பட்டதாரிகளுக்கு ரூ.300 மாதம் தோறும் உதவிதொகையாக வழங்கப்படும். மாற்று திறனாளிகள் 10ம் வகுப்பு தேர்ச்சி, தேர்ச்சி பெறாதவர்களுக்கு ரூ.300, 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.375, பட்டதாரிகளுக்கு ரூ.450 மாதம் தோறும் உதவிதொகையாக வழங்கப்படும்.
விண்ணப்பிக்க உள்ளவர்கள் திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம் அல்லது வேலைவாய்ப்புதுறை இணையதளத்தின் மூலம் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்தோ அல்லது விண்ணப்பபடிவத்தினை நகல் எடுத்தோ விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து வரும் 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஏற்கனவே உதவிதொகை பெற்று வருபவர்கள் தொடர்ந்து உதவி தொகை பெற வேலையில் இல்லை என்பதற்கான உறுதிமொழி ஆவணத்தினை வழங்கவேண்டும்.
இவ்வாறு அவர் அதில் கூறி உள்ளார்.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு