Skip to main content

வேலை வாய்ப்பு பதிவு செய்து காத்திருப்போர் உதவி தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருப்போர் உதவி தொகைக்கு விண்ணப்பிக்கலாம் 

திருவண்ணாமலை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்து 5 ஆண்டு காத்திருப்பவர்கள் உதவிதொகை பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர்
ஞானசேகரன் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை கலெக்டர் ஞானசேகரன் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து தொடர்ந்து புதுப்பித்து வந்து 31.3.2014ம் தேதி வரை பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கு மேல் காத்திருக்கும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். மாற்று திறனாளிகள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 1 ஆண்டு முடிந்திருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வேலைவாய்ப்பு அலுவலத்தில் பதிவுசெய்து 5ஆண்டுகளுக்கு மேல் காத்திருக்கும் இளைஞர்கள் உதவிதொகை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 45 வயதுக்குட்பட்டவர்களாகவும், பிசி,எம்பிசி மற்றும் இதர வகுப்பினர் 40 வயதிற்குட்பட்டவர்களாகவும் ஆண்டு வருமானம் 50 ஆயிரத்திற்குள் இருக்க வேண்டும்.
பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு ரூ.100, தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.150, மேல்நிலைப்படிப்பு முடித்தவர்களுக்கு ரூ.200, பட்டதாரிகளுக்கு ரூ.300 மாதம் தோறும் உதவிதொகையாக வழங்கப்படும். மாற்று திறனாளிகள் 10ம் வகுப்பு தேர்ச்சி, தேர்ச்சி பெறாதவர்களுக்கு ரூ.300, 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.375, பட்டதாரிகளுக்கு ரூ.450 மாதம் தோறும் உதவிதொகையாக வழங்கப்படும்.
விண்ணப்பிக்க உள்ளவர்கள் திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம் அல்லது வேலைவாய்ப்புதுறை இணையதளத்தின் மூலம் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்தோ அல்லது விண்ணப்பபடிவத்தினை நகல் எடுத்தோ விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து வரும் 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஏற்கனவே உதவிதொகை பெற்று வருபவர்கள் தொடர்ந்து உதவி தொகை பெற வேலையில் இல்லை என்பதற்கான உறுதிமொழி ஆவணத்தினை வழங்கவேண்டும்.
இவ்வாறு அவர் அதில் கூறி உள்ளார்.

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி கவுன்சில் - விசிட்டிங் பெல்லோஷிப்ஸ்

கல்வித் தகுதி பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்தில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் மருத்துவத்தில் எம்.டி., பட்டம் அறிவியலில் பி.எச்டி., பட்டம் வயது : 50 வயதிற்கு கீழ் இதர தகுதிகள் விண்ணப்பிப்பவர், அங்கீகரிக்கப்பட்ட அறிவியல் / தொழில்நுட்ப நிறுவன