Skip to main content

வீடுகளுக்கு பயன்படுத்தப்படும் இன்டர்நெட் சேவை வேகம் அதிகரிப்பு

வீடுகளுக்கு பயன்படுத்தப்படும் அளவில்லா அகன்ற அலைவரிசை இன்டர்நெட் சேவை உட்பட இன்டெர் சேவையின் வேகம் ஜூன் 1ம் தேதி முதல் அதிகரிக்கப்படும் என்று சென்னை தொலைபேசி அறிவித்துள்ளது. இது குறித்து பிஎஸ்என்எல் நிறுவனமான சென்னை தொலைபேசி நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பிஎஸ்என்எல் நிறுவனம் தனது
வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வந்த பல்வேறு அகன்ற அலைவரிசை இணையதளத்தின் பதிவிறக்க வேகம் 256கேபியில் இருந்து 512கேபியாக உயர்த்தப்படுகிறது.வீடுகளுக்கான அளவில்லா இணையதள சேவை பெறும் மாத வாடகை 525 திட்டத்தின் கீழும், தொலைபேசி சேவையுடன் கூடிய அளவில்லா அகன்ற அலைவரிசை இணையதள சேவையான மாத வாடகை 650 திட்டத்தின் கீழும் உள்ள இணைப்புகளின் பதிவிரக்க வேகம் சராசரியாக 512கேபியாக இருக்கும்.

முன்பு இந்த சேவையில் குறைந்த பட்சம் 256கேபியாக இருந்தது.இதேபோல் தொலைபேசியுடன் அளவில்லா அகன்ற அலைவரிசை இணையதள சேவையான மாத வாடகை 1800, 2250 ஆகியவற்றிலும் குறைந்த பட்சம் பதிவிறக்க வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது.இப்படி பயன்பாட்டில் உள்ள அனைத்து திட்டங்களுக்கான வேகமும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றம் ஜூன் 1ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது. ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள இணைப்புகளுக்கு மட்டுமின்றி இந்த திட்டங்களின் கீழ் புதிதாக இணைப்பு பெறுபவர்களுக்கும் இந்த மாற்றங்கள் பொருந்தும்.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு