Skip to main content

நோக்கியா சென்னை தொழிற்சாலை மூடப்படும்

கோடிக்கணக்கான எண்ணிக்கையில் மொபைல் போன்களைத் தயாரிக்கும் திறன் கொண்ட, சென்னை ஸ்ரீபெரும்புதூரில் இயங்கும் நோக்கியாவின் தொழிற்சாலை மூடப்படும் நிலையை அடைந்துள்ளது. இந்த தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் அலுவலகப்
பணியாளர்களில் 85 சதவீதம் பேர், தன் விருப்ப ஓய்வில் செல்ல விருப்பம் தெரிவித்து எழுதிக் கொடுத்துள்ளனர்.
ரூ.3,000 கோடி அளவில் வரி ஏய்ப்பு செய்திருப்பதாக, சென்னை உயர்நீதி மன்றம் குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து பல பிரச்னைகளை இந்த தொழிற்சாலை சந்தித்தது. பல ஊழியர்கள் காலவரையற்ற விடுமுறையில் சென்றனர். தொழிற்சாலையில் போன் தயாரிக்கப்படுவது ஏறத்தாழ நின்றுவிட்டது. மொத்த தொழிற்சாலை கட்டமைப்பும் தள்ளாடத் தொடங்கியது. தொழிலாளர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் விழித்தனர். நிர்வாகத்தில் இருந்தவர்களும் எதை நோக்கி செல்வது என அறியாமல் இருந்தனர். இதில் நீதிமன்றத்தில் வழக்கினைச் சந்திப்பதில் கால தாமதம் ஏற்பட்டது. நோக்கியா நிர்வாகம் தன் அனைத்து ஊழியர்களுக்கும் தானாக முன்வந்து பணி ஓய்வு பெறும் திட்டத்தினை வழங்கியபோது, ஏறத்தாழ 5,000 முதல் 7,500 தொழிலாளர்கள் அதனை ஏற்றுக் கொண்டனர். 
2006 ஆம் ஆண்டு முதல் சென்னை ஸ்ரீபெரும்புதூர் நோக்கியா தொழிற்சாலை இயங்கத் தொடங்கியது. அண்மையில் வெளியான ஆஷா வரிசை போன்கள் உட்பட, அனைத்து மாடல் போன்களும் இங்கு தயார் செய்யப்பட்டன. இங்கு தயாராகும் அனைத்தும், இங்கிருந்து ஏற்றுமதி மட்டுமே செய்யப்பட வேண்டும் என்ற ஒப்பந்தக் கட்டுப்பாட்டினை மீறி, நோக்கியா உள்நாட்டில் தன் போன்களை விற்பனை செய்ததாக அரசு குற்றம் சாட்டியது. இதனை நிர்வாகம் ஏற்றுக் கொள்ளாமல் தொடர்ந்து இயங்கியதால், பிரச்னை பெரிய அளவில் சென்றது. 
இந்த பிரச்னை, நோக்கியா நிறுவனத்தை மைக்ரோசாப்ட் வாங்குவதில் தாமதத்தையோ, சிக்கலையோ ஏற்படுத்தக் கூடாது என்பதற்காக பல முடிவுகள் எடுக்கப்பட்டன. இறுதியில் சென்ற ஏப்ரல் 24ல், முழுமையாக தொழிற்சாலை மைக்ரோசாப்ட் வசம் சென்றது. தற்போதைக்கு, அதனை நெடுங்கால குத்தகை அடிப்படையில், மைக்ரோசாப்ட் ஏற்றுள்ளது. வியட்நாம் நாட்டில், மிகப் பெரிய அளவில் தொழிற்சாலை ஒன்றை அமைத்து இயக்குவதால், நோக்கியாவிற்கு, சென்னை தொழிற்சாலை மூடப்படுவது பாதிப்பினை உண்டாக் காது. 
சென்னை ஏற்றுமதி வளாகச் சலுகைகளுக்கான காலம் முடிந்த பின்னர், நோக்கியா இந்த தொழிற்சாலையில் அதிக கவனம் செலுத்தவில்லை. தற்போது இதில் இருந்து விலக்கப்படும் தொழிலாளர்களுக்கு, நோக்கியா வழங்கும் கொடைகள் நல்லவிதமாக இருப்பதால், தொழிலாளிகள் அவற்றை ஏற்றுக் கொண்டு விலகுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி கவுன்சில் - விசிட்டிங் பெல்லோஷிப்ஸ்

கல்வித் தகுதி பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்தில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் மருத்துவத்தில் எம்.டி., பட்டம் அறிவியலில் பி.எச்டி., பட்டம் வயது : 50 வயதிற்கு கீழ் இதர தகுதிகள் விண்ணப்பிப்பவர், அங்கீகரிக்கப்பட்ட அறிவியல் / தொழில்நுட்ப நிறுவன