சத்துணவு மையங்களில் குறையா? புகார் செய்ய இலவச தொலைபேசி
திருவண்ணாமலை, :சத்துணவு மையங்களில் காணப்படும் குறைபாடுகள் குறித்து, கட்டணமில்லா தொலைபேசி மூலம் பொதுமக்கள் புகார் செய்யலாம்
என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, திருவண்ணாமலை கலெக்டர் ஞானசேகரன் தெரிவித்திருப்பதாவது:
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பள்ளி சத்துணவு மையங்களின் செயல்பாடுகள் மற்றும் குறைபாடுகள் குறித்து பொதுமக்கள் புகார் செய்ய வசதியாக கட்டணமில்லா தொலைபேசி எண் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் சத்துணவு பிரிவு அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள கட்டணமில்லா தொலைபேசி 1800 425 4978 என்ற எண்ணில் பொதுமக்கள் தொடர்பு கொண்டு புகார் செய்யலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.