Skip to main content

இன்ஜினியரிங் பணியிடங்கள்

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் எனப்படும் பெல் நிறுவனம் இந்திய ராணுவத்திற்கு பிரத்யேகமாகத் தேவைப்படும் எலக்ட்ரானிக்ஸ் தேவைகளை நிறைவேற்றும் பொருட்டு 1954ல் இந்திய அரசால் நிறுவப்பட்டது. பின்னர் இந்த நிறுவனம் மேலும் வளர்ச்சி கண்டு தற்சமயம் எலக்ட்ரானிக்ஸ் தொடர்புடைய பல்வேறு பொருட்களைத் தயாரிப்பது மற்றும் இதர
சேவைகளுக்காக இந்தியா மட்டுமன்றி உலகெங்கும் அறியப்படுகிறது. இந்த நிறுவனத்தில் புரொபேஷனரி இன்ஜினியர்ஸ் பிரிவில் காலியாக உள்ள 200 காலியிடங்களை நிரப்புவதற்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பிரிவுகள் மற்றும் காலியிட விபரங்கள்: பெல் நிறுவனத்தின் புரொபேஷனரி இன்ஜினியர்ஸ் பதவியில் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் 100ம், மெக்கானிகலில் 75ம், கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் 20ம், சிவில் பிரிவில் 3ம், எலக்ட்ரிகலில் 2ம் சேர்த்து மொத்தம் 200 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
வயது: 01.05.2014 அடிப்படையில் இந்தப் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 25 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: ஏ.ஐ.சி.டி.இ., அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தின் மூலமாக எலக்ட்ரானிக்ஸ், இ அண்டு சி, இ அண்டு டி, மெக்கானிகல், சிவில், எலக்ட்ரிகல் அண்டு எலக்ட்ரானிக்ஸ், சி.எஸ்., போன்ற பிரிவுகளில் பி.இ., பி.டெக்., அல்லது பி.எஸ்.சி., இன்ஜினியரிங் முடித்தவர்களும் தற்போது இதே படிப்பின் இறுதி தேர்வை எதிர்கொள்பவர்களும் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம்: பெல் நிறுவனத்தின் புரொபேஷனரி இன்ஜினியர்ஸ் பதவிக்கு விண்ணப்பிக்க ரூ.500/-ஐ கட்டணமாக செலுத்த வேண்டும். 
தேர்ச்சி முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் என்ற அடிப்படையில் தேர்ச்சி இருக்கும்.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்-லைன் முறையில் முதலில் விண்ணப்பிக்க வேண்டும். இதன் பின் கிடைக்கும் ரெஜிஸ்ட்ரேஷன் ஸ்லிப்பை பின்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
Post Box No.3076, Lodi Road, New Delhi-110003 
விண்ணப்பிக்க இறுதி நாள்: 05.06.2014
இணையதள முகவரி: <https://jobapply.in/BEL2014/DetailsAdv.htm#norms>

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா