Skip to main content

இன்ஜினியரிங் பணியிடங்கள்

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் எனப்படும் பெல் நிறுவனம் இந்திய ராணுவத்திற்கு பிரத்யேகமாகத் தேவைப்படும் எலக்ட்ரானிக்ஸ் தேவைகளை நிறைவேற்றும் பொருட்டு 1954ல் இந்திய அரசால் நிறுவப்பட்டது. பின்னர் இந்த நிறுவனம் மேலும் வளர்ச்சி கண்டு தற்சமயம் எலக்ட்ரானிக்ஸ் தொடர்புடைய பல்வேறு பொருட்களைத் தயாரிப்பது மற்றும் இதர
சேவைகளுக்காக இந்தியா மட்டுமன்றி உலகெங்கும் அறியப்படுகிறது. இந்த நிறுவனத்தில் புரொபேஷனரி இன்ஜினியர்ஸ் பிரிவில் காலியாக உள்ள 200 காலியிடங்களை நிரப்புவதற்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பிரிவுகள் மற்றும் காலியிட விபரங்கள்: பெல் நிறுவனத்தின் புரொபேஷனரி இன்ஜினியர்ஸ் பதவியில் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் 100ம், மெக்கானிகலில் 75ம், கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் 20ம், சிவில் பிரிவில் 3ம், எலக்ட்ரிகலில் 2ம் சேர்த்து மொத்தம் 200 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
வயது: 01.05.2014 அடிப்படையில் இந்தப் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 25 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: ஏ.ஐ.சி.டி.இ., அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தின் மூலமாக எலக்ட்ரானிக்ஸ், இ அண்டு சி, இ அண்டு டி, மெக்கானிகல், சிவில், எலக்ட்ரிகல் அண்டு எலக்ட்ரானிக்ஸ், சி.எஸ்., போன்ற பிரிவுகளில் பி.இ., பி.டெக்., அல்லது பி.எஸ்.சி., இன்ஜினியரிங் முடித்தவர்களும் தற்போது இதே படிப்பின் இறுதி தேர்வை எதிர்கொள்பவர்களும் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம்: பெல் நிறுவனத்தின் புரொபேஷனரி இன்ஜினியர்ஸ் பதவிக்கு விண்ணப்பிக்க ரூ.500/-ஐ கட்டணமாக செலுத்த வேண்டும். 
தேர்ச்சி முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் என்ற அடிப்படையில் தேர்ச்சி இருக்கும்.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்-லைன் முறையில் முதலில் விண்ணப்பிக்க வேண்டும். இதன் பின் கிடைக்கும் ரெஜிஸ்ட்ரேஷன் ஸ்லிப்பை பின்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
Post Box No.3076, Lodi Road, New Delhi-110003 
விண்ணப்பிக்க இறுதி நாள்: 05.06.2014
இணையதள முகவரி: <https://jobapply.in/BEL2014/DetailsAdv.htm#norms>

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு