குறைந்த கட்டணத்தில், கிராமப் புறங்களில் இணைய இணைப்பு வசதியைத் தர வேண்டும் என்று எதிர் பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில், இணையக் கட்டணம் உயரும் வாய்ப்புகள் உண்டு என்ற தகவல் கிடைத்துள்ளது. Telecom
Regulatory Authority of India என்னும் இணைய சேவைகளைக் கண்காணிக்கும் அமைப்பு, புதியதாக, சீரான 8 சதவீதக் கட்டணத்தினை, இணைய சேவை வழங்கும் நிறுவனங்கள் மீது விதிக்க திட்டமிட்டுள்ளது. இதனால், இணைய சேவைக்கான கட்டணம் பொதுமக்களுக்கு 30% வரை உயரலாம்.
தற்போது ட்ராய் அமைப்பு, இந்த தொலை தொடர்பு நிறுவனங்களின் மொத்த வருமானத்தைக் கணக்கிட்டு அதில் குறிப்பிட்ட சதவீதத்தினை உரிமக் கட்டணமாக விதிக்கிறது. இதில் சில வகை வருமானங்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கிறது. தற்போது மொத்தமாகக் கணக்கிட்டு உரிமக் கட்டணம் வசூலிக்க ட்ராய் திட்டமிடுகிறது.
புதிய கட்டண விகிதத்தினை, 2013 முதலே இணைய சேவை வழங்கும் நிறுவனங்கள் எதிர்த்து வருகின்றன. 2017ல், 17.5 கோடி பிராட்பேண்ட் இணைப்புகளையும், 2020 ஆம் ஆண்டில், 60 கோடி இணைய இணைப்புகளையும் வழங்க இலக்கு வைத்து, நிறுவனங்கள் முயற்சிக்கையில், இது போன்ற உரிமக் கட்டண உயர்வு, இவற்றிற்குத் தடையாக இருக்கும் எனச் சுட்டிக் காட்டியுள்ளனர்.