Skip to main content

இணைய இணைப்பு கட்டணம் உயரலாம்

குறைந்த கட்டணத்தில், கிராமப் புறங்களில் இணைய இணைப்பு வசதியைத் தர வேண்டும் என்று எதிர் பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில், இணையக் கட்டணம் உயரும் வாய்ப்புகள் உண்டு என்ற தகவல் கிடைத்துள்ளது. Telecom
Regulatory Authority of India என்னும் இணைய சேவைகளைக் கண்காணிக்கும் அமைப்பு, புதியதாக, சீரான 8 சதவீதக் கட்டணத்தினை, இணைய சேவை வழங்கும் நிறுவனங்கள் மீது விதிக்க திட்டமிட்டுள்ளது. இதனால், இணைய சேவைக்கான கட்டணம் பொதுமக்களுக்கு 30% வரை உயரலாம்.
தற்போது ட்ராய் அமைப்பு, இந்த தொலை தொடர்பு நிறுவனங்களின் மொத்த வருமானத்தைக் கணக்கிட்டு அதில் குறிப்பிட்ட சதவீதத்தினை உரிமக் கட்டணமாக விதிக்கிறது. இதில் சில வகை வருமானங்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கிறது. தற்போது மொத்தமாகக் கணக்கிட்டு உரிமக் கட்டணம் வசூலிக்க ட்ராய் திட்டமிடுகிறது.
புதிய கட்டண விகிதத்தினை, 2013 முதலே இணைய சேவை வழங்கும் நிறுவனங்கள் எதிர்த்து வருகின்றன. 2017ல், 17.5 கோடி பிராட்பேண்ட் இணைப்புகளையும், 2020 ஆம் ஆண்டில், 60 கோடி இணைய இணைப்புகளையும் வழங்க இலக்கு வைத்து, நிறுவனங்கள் முயற்சிக்கையில், இது போன்ற உரிமக் கட்டண உயர்வு, இவற்றிற்குத் தடையாக இருக்கும் எனச் சுட்டிக் காட்டியுள்ளனர். 

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு