Skip to main content

பள்ளிச் சான்றிதழில் ஒரு தேதியும், உண்மையான பிறந்த தேதி வேறொன்றா...

பெரும்பாலானோரின் பள்ளிச் சான்றிதழில் ஒரு தேதியும், உண்மையான பிறந்த தேதி வேறொன்றாகவும் இருப்பது கண்கூடு.

இதற்காக பள்ளிச் சான்றிதழில் உள்ள தேதிப்படி புதிய பதிவை உருவாக்கவும் முயற்சிகள் நடக்கின்றன.

போலிகளைத் தவிர்ப்பதற்காக திருச்சி மாநகராட்சி மூலம் பிறப்புப் பதிவில்லாச் சான்று பெறுவதற்கான வழிமுறைகளை மாநகராட்சி ஆணையர்
வே.ப. தண்டபாணி அறிவித்துள்ளார்.

தவறான முறையில் போலியாக இச்சான்றுகளைப் பெற்றது பிற்காலத்தில் தெரியவந்தால் அந்தப் பதிவுகள் நீக்கப்படுவதுடன், சட்ட நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் என்றும் எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.

1989-க்குப் பிறகு பிறந்த அத்தனைக் குழந்தைகளுக்கும் பிறப்புச் சான்றிதழ் கட்டாயம் என மத்திய அரசு அறிவித்துவிட்டதைத் தொடர்ந்து, பாஸ்போர்ட் உள்ளிட்ட தற்போதைய அனைத்துத் தேவைகளுக்கும் பிறப்புச் சான்றிதழ் அவசியமாகிவிட்டது.

ஆனால், பெரும்பாலானோரின் பள்ளிச் சான்றிதழில் ஒரு தேதியும், உண்மையான பிறந்த தேதி வேறொன்றாகவும் இருப்பது கண்கூடு.

இதற்காக பள்ளிச் சான்றிதழில் உள்ள தேதிப்படி புதிய பதிவை உருவாக்கவும் முயற்சிகள் நடக்கின்றன. அதேபோல, தத்தெடுத்த குழந்தைகளுக்கு ஏற்கெனவே பதியவில்லை என்று கூறி புதிய பதிவை உருவாக்கவும் முயற்சிகள் நடக்கின்றன. இவற்றால் இரு பதிவுகள் ஏற்பட்டுவிடுகின்றன.

இதைத் தவிர்க்கும் வகையில் பதிவில்லாச் சான்று மற்றும் தத்தெடுக்கும் நடைமுறைகளை கறாராக கடைப்பிடிக்கவும் மாநகராட்சி வழிமுறைகளை அறிவித்துள்ளது.

இதன்படி, பிறப்பு நிகழ்ந்தபோது குடியிருந்த இடத்துக்கான இருப்பிடச் சான்று, பிறப்பு நிகழ்ந்த இடத்துக்கான ஆதாரச் சான்று ஆகியவற்றை இணைக்க வேண்டும். அத்துடன், பள்ளிச் சான்று, குடும்ப அட்டை போன்றவை சார்புச் சான்றிதழ்களாகவே ஏற்கப்படும்.

மற்ற குழந்தைகளின் பிறப்புச் சான்றிதழ்கள், முன்பு படித்த பள்ளியில் இருந்து சான்றிதழ் போன்றவற்றை விசாரணைக்கு வழங்கலாம். தத்தெடுத்த குழந்தையாக இருந்தால் முறைப்படி பத்திரத்தில் பதிவு செய்து நீதிமன்ற ஆணை பெற்று அவற்றை சமர்ப்பித்தால் புதிய பிறப்புச் சான்றிதழ் வழங்கப்படும்.

பதிவில்லாச் சான்று கோருவதற்கான உண்மையான காரணத்தைக் குறிப்பிட வேண்டும். ஏற்கெனவே பதிவாகியிருந்து போலியாக பதிவில்லாச் சான்று கோருவது சட்டப்படி குற்றம். பிற்காலத்தில் இது தெரியவருமானால் அந்தப் பதிவு நீக்கம் செய்யப்படுவதுடன், குற்ற நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நடைமுறைச் சிக்கல்கள்

சில பத்தாண்டுகளுக்கு முன்பு குடியிருந்த வீட்டுக்கான ஆதாரங்களைப் பெறுவது அவ்வளவு சுலபமில்லை என்கிறார் வழக்குரைஞர் அ. கமருதீன்.

நீதிமன்றத்தில் அபிடவிட் தாக்கல் செய்து சாட்சிக் கூண்டிலேறி ஒப்புதல் தெரிவிப்பதே எதிர்காலத்தில் தவறு என்றால் குற்ற நடவடிக்கைக்கு உள்படுவதாகத்தான் அர்த்தம் என்னும்போது, பதிவில்லாச் சான்று வழங்குவதற்கு இத்தனை கெடுபிடிகள் தேவையற்றது என்றும் அவர் கூறுகிறார்.

ஜாதகம், கிராம நிர்வாக அலுவலர் சான்று, அரசிதழ் பதிவுபெற்ற அதிகாரிகள் இருவரிடம் உறுதிச் சான்று போன்றவற்றையும் கேட்கின்றனர் என்றார் கமருதீன்.

இவற்றைத் தாண்டி, எல்லாச் சான்றுகளையும் இணைத்து விண்ணப்பித்த பிறகு மாநகராட்சி அலுவலகத்தில் அந்த விண்ணப்பம் காணாமல் போய்விடுவதும், நீதிமன்ற ஆணைகளும் சேர்ந்து காணாமல் போய்விடுவதும் நடந்திருக்கிறது.

இவை குறித்து மாநகராட்சி நகர்நல அலுவலர் டாக்டர் மாரியப்பனிடம் கேட்டபோது அவர் கூறியது:

இந்தியத் தலைமைப் பதிவாளரின் 2007 ஜன. 31ஆம் தேதியிட்ட சுற்றறிக்கையின்படி இருப்பிடச் சான்று, ஆதாரச் சான்று அவசியம். விஏஓ சான்று, அரசிதழ் பதிவு பெற்ற அலுவலரின் உறுதிச் சான்று, ஜாதகம் போன்றவற்றை அண்மைக்காலமாகக் கேட்பதில்லை.

கொடுத்துள்ள ஆவணங்கள் எங்களுக்கு போதுமானதாக இல்லையெனில் சட்டப்படி காவல்துறை விசாரணைக்கு வழங்கிவிடுவோம். இதனால் ஏற்படும் காலதாமதம் தவிர்க்க முடியாததுதான்.

விண்ணப்பங்கள், ஆவணங்களைப் பாதுகாத்து வைக்க தனி அலுவலர்களை நியமித்து பணியாற்றி வருகிறோம் என்றார் மாரியப்பன்

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு