Skip to main content

தமிழகம் முழுவதும் ஸ்மார்ட் ரேஷன்கார்டு வழங்க ஆய்வு

தமிழகத்தில் வரும் 2015ம் ஆண்டு அரசின் அனைத்து திட்டங்களும் ‘பேப்பர்‘ நடைமுறையில் இருந்து ஆன்லைன் திட்டத்திற்கு மாற்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நலத்திட்டங்கள், பயன்பாட்டு கிராமங்கள், இலவச பொருட்கள் என அனைத்தும் இனி ஆன்லைன் மூலமாகவே
செயல்படுத்தப்படும். பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள் ஆன்லைனில் பதிவு செய்வது கட்டாயமாக்கப்படும். மாநில அளவில் 220 தாலுகாக்கள் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டு வருகிறது. கிராம நிர்வாக அலுவலர்களுக்கு லேப் டாப் பயிற்சி தரப்பட்டுள்ளது. இதற்காக மாநில அளவில் 26 நலத்திட்டங்களுக்கான தொலைநோக்கு திட்டம் உருவாக்கப் பட்டுள் ளது. மாநில குடியுரிமை புள்ளி விவர தொகுப்பு (ஸ்டேட் ரெசிடென்ட் டேட்டா ஹப்) ஆய்வு பணி விரைவில் துவக்கப்படவுள்ளது.

120 நாளில் மொத்த பணிகளும் முடிக்கப்படும். வரும் ஆண்டில் பழைய ரேஷன் கார்டுகளை மாற்றி விட்டு ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்குவது இந்த ஆய்வின் பிரதான இலக்காக இருக்கிறது. இதுகுறித்து வருவாய்த்துறையினர் கூறுகையில், ‘‘மாநிலத்தில் 1.95 கோடி ரேஷன் கார்டுகள் புழக்கத்தில் இருக்கிறது. இவற்றை ஆன்லைனில் சரிபார்ப்பதன் மூலமாக போலி ரேஷன் கார்டுகளை ஒழித்து பழைய ரேஷன் கார்டிற்கு மாற்றாக ஸ்மார்ட் கார்டு வழங்க முடியும். மருத்துவ காப்பீடு அட்டை போல் இனி ரேஷன் கார்டும் மாறி விடும். புதிய உறுப்பினர்களை எளிதில் சேர்க்க முடியும், நீக்க முடியும். மாநில அளவில் 28.40 லட்சம் பேர் வருவாய், சமூக நலத்துறையில் உதவி தொகை பெறுகின்றனர். ஆதார் அடையாள அட்டை கணக்கெடுப்பு உதவியுடன் விவரங்களை தொகுத்து உண்மையாக உதவி தொகை பெறுபவர்கள், உயிருடன் இருப்பவர்கள், இல்லாதவர்கள் விவரங்களை சேகரிக்க முடியும். 

1.23 கோடி பேர், தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் பயனாளிகளாக உள்ளனர். இவர்களின் விவரங்களும் ஆன்லைன் மயமாக்கப்படும். 1.36 கோடி குடும்பத்தினர் மருத்துவ காப்பீடு செய்துள்ளனர். 17 நலத்திட்ட அமைப்புகளின் மூலமாக 3.34 லட்சம் பேர் பயன்பெறுகின்றனர். கல்வித்துறையில் பல லட்சம் பேர் பயனடைகின்றனர். அனைத்து விவரங்களையும் குடியுரிமை திட்டத்தில் தொகுப்பதன் மூலமாக உதவி திட்டங்கள், வளர்ச்சி பணிகளை எளிதாக நிறைவேற்ற முடியும். பொதுமக்கள் பல முறை கோரிக்கை மனுக்கள் கொடுத்து ஏமாற்றத்தில் தவிக்கவேண்டிய நிலையிருக்காது, ‘‘என்றனர்.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு