Skip to main content

தேர்ச்சி குறைந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கூட்டம்

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வில், தேர்ச்சி குறைந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கூட்டம்' : கல்வித்துறை அதிகாரிகள் முடிவு 

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வில், தேர்ச்சி குறைந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு, இன்று நடக்கும் கூட்டத்தில், "டோஸ்' கொடுக்க கல்வித்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு, கடந்த 9ம் தேதியும், பத்தாம் வகுப்பு தேர்வு
முடிவு, 23ம் தேதியும் வெளியானது. திருப்பூர் மாவட்டத்தில், பிளஸ் 2 தேர்வு எழுதிய 22,481 மாணவர்களில், 21,158 பேர் தேர்ச்சி பெற்றனர். மாவட்ட தேர்ச்சி விகிதம், 94.12 சதவீதத்தை எட்டியது. அதேபோல், பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய, 27,396 மாணவர்களில், 25,855 பேர் தேர்ச்சி பெற்றனர். மாவட்ட தேர்ச்சி, 94.38 சதவீதத்தை பிடித்தது. பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகளில், அரசு, அரசு உதவி பெறும், மாநகராட்சி பள்ளிகளின் தேர்ச்சி விகிதம், கடந்த ஆண்டை விட, இந்தாண்டு அதிகரித்துள்ளது. இவ்விரு தேர்வுகளிலும், சில அரசு, மாநகராட்சி, அரசு உதவி பெறும் பள்ளிகள், தேர்ச்சியில் மிகவும் பின்தங்கியுள்ளன. சில பள்ளிகள், சென்டத்தையும் தவற விட்டுள்ளன. தேர்வு முடிவுகளை முழுமையாக கூர்ந்து ஆய்வு செய்துள்ள, மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் தேர்ச்சி விகித அடிப்படையில், பள்ளிகளை தரம் பிரித்துள்ளனர். பிஷப் உபகாரசாமி பள்ளியில் இன்று, காலை 10.00 மணிக்கு அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூட்டம் நடக்கிறது.
அடுத்த மாதம் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், மாணவர்களுக்கு சமச்சீர் பாடப்புத்தகங்கள், சீருடை வழங்கு வது குறித்து, தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்படும். தேர்வு முடிவுகளை மையமாக கொண்டு, தேர்ச்சியில் முன்னேறியுள்ள பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்படும். அதேநேரம், பின்தங்கிய பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு "டோஸ்' கொடுக்கவும் கல்வித்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். தேர்ச்சி குறைந்த பள்ளிகளில், மாணவர் வருகை, போதுமான அளவு ஆசிரியர்கள் உள்ளனரா போன்ற காரணங்களையும் விசாரித்து, தீர்வு காண, முடிவு செய்துள்ளனர்.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு